அந்த உறுப்பின் மேல் டாட்டூ போட சொல்லி வற்புறுத்தினார்..! – பிரியாமணி பகீர் புகார்..!

பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக பரபரப்பாக நடித்து வந்தவர்.

திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் பிறகு மீண்டும் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். தற்போது நான்கு படங்களில் நடித்து வரும் நடிகை பிரியாமணி ஃபேமிலி மென் என்ற வெப்சீரிஸ் நடித்திருந்தார்.

இந்த வெப்சீரிஸ் இவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்த வெப்சீரிஸிற்கு பிறகு சினிமாவிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இந்நிலையில், சினிமாவில் அறிமுகமான காலத்தில் பிரபல தயாரிப்பாளர் என்னிடம் எனக்கு பிடிக்காத பல விஷயங்களை செய்யச் சொல்லி தொல்லை கொடுத்தார் என்றும் அவரால் மனரீதியாக பிரச்சினைகளை எதிர்கொண்டேன் என்றும் நடிகை பிரியாமணி பகீர் புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

இந்த புகார் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதுகுறித்து பிரியாமணி கூறியதாவது, நான் நடித்த ஒரு படம் பாதி முடிந்துவிட்ட நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் என்னுடைய தொப்புளுக்கு கீழே பச்சை குத்தியது போல டாட்டூ போட்டு கொள்ள வேண்டும் என்று தொந்தரவு செய்தார்.

எனக்கு அது சுத்தமாக விருப்பம் கிடையாது. வேறு வழியே இல்லாமல் படத்தில் படத்தில் நடிக்கவேண்டும் படத்தை முடித்தாக வேண்டும் என்ற காரணத்திற்காக விருப்பமில்லாத வேலைகளை செய்ய வேண்டியதாக ஆகியது.

---- Advertisement ----

வேறுவழியில்லாமல் அவருடைய விருப்பத்தயு ஏற்றேன். சினிமாவில் தங்களது விருப்பம் இல்லாத வேலைகளை செய்வது என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இன்று மாறி வருகிறது என்று கூறியிருக்கிறார் நடிகை பிரியாமணி.

வழக்கம்போல இப்படியான புகார் கூறும் நடிகைகள் யார் இந்த தொல்லையை கொடுத்தார்..? அவருடைய பெயர் என்ன..? என்பதை கூற மாட்டார்கள். அதை போலவே, பிரியாமணியும் யார் தொல்லை கொடுத்தார்..? அவருடைய பெயர் என்ன..? என்று என்பதை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----