பூ எது..? நீங்க எதுன்னே கண்டுபிடிக்க முடியல.. இளசுகளை புலம்ப வைத்த பிரியங்கா மோகன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஒரு நடிகை என்றால் அது பிரியங்கா மோகன் என்று கூறலாம். தற்பொழுது துல்கர் சல்மான் நடித்த ஒரு விளம்பரம் ஒன்றில் இவரும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வரும் நடிகை பிரியங்கா மோகன் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஹீரோயினாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது நடிகை தமன்னா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. அதனை பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கும் அடுத்தடுத்த படங்களில் ஜோடியாக உள்ளார் என்று தகவல்கள் விவரமறிந்த வட்டாரங்கள் இருந்து நமக்கு கிடைக்கின்றன. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்காக தோன்றுகிறார்.

---- Advertisement ----

அந்த வகையில் அழகான பூ போட்ட கவுன் போன்ற உடை அணிந்துகொண்டு செதுக்கி வைத்த சிலை போல இப்போதுதான் பூத்த ரோஜா மொட்டு போல இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அம்மனின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

---- Advertisement ----