சினிமா தயாரிப்பாளர் கொலை – படுக்கைக்கு வர தாமதித்த இரு நடிகைகள் இவர்களா..? – அதிர்ச்சி தகவல்..!

இந்த கொலைக்கு காரணம் என்ன என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகிறார்கள். சென்னையை அடுத்த  கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் இவர்  சினிமா தயாரிப்பாளர். ஆரம்பத்தில் இவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

நேற்று இவரது உடல் கூவம் ஆற்று பகுதியில் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டறிந்து  பூந்தமல்லி போலீசார் மீட்டுள்ளனர்.

 கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் அடக்கப்பட்ட இவரது உடலில் வாய் கட்டப்பட்ட நிலையில் இருந்தது என்று போலீசார் கூறுகிறார்கள். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 மேலும் இந்த கொலை எப்படி நடந்தது. எதற்காக நடந்தது. இவருக்கு முன்விரோதம் ஏதேனும் உள்ளதா? என்ற வரிசையில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

 இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை  உற்றுப் பார்த்த போது யாரோ ஒருவர் அவர் உடலை வீசி விட்டுப் போவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

---- Advertisement ----

  கடைசியாக பாஸ்கர் வீட்டுக்கு கணேசன் வந்து சென்றது தெரிந்துள்ளது. அங்கு நின்றிருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செங்குன்றம் அருகே கணேசனை மடக்கிப் பிடித்த போலீசார் அவர் விபசார தரகர் என்பதை ஒப்புக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.

போலீசாரிடம் கூறிய தகவல் என்னவென்றால் பாஸ்கர் அடிக்கடி இளம்பெண்களுடன் இருக்கவேண்டுமென்றால் தன்னிடம் கூறுவார் என்றும்  அதற்கு தகுந்தது போல் பெண்களை சப்ளை செய்யக்கூடியவர் தானென்றும்  2ஆம் தேதி அதுபோலவே இரண்டு இளம் நடிகைகள் தங்கள் வீட்டுக்கு வந்து இருப்பதாக பாஸ்கரிடம் தகவல் தெரிவித்தேன்.

அவரும் பணத்துடன் வருகிறேன் என்று கூறி பணத்துடன் வந்தார். அந்த இளம் நடிகைகள் வருவதற்கு தாமதம் ஆனதால் எங்கள் இருவர் இடையே மிகப்பெரிய  சண்டை ஏற்பட்டது.

தன்னையும் தன் குடும்பத்தையும் அவமானப்படுத்தி பேசிய பாஸ்கரை கீழே தள்ளிய போது தலையில் அடி பட்டு மயங்கியனார். பின்னர் ஏற்பட்ட அதீத கோபத்தால் அவர் கழுத்தை  நெரித்து வீட்டில் இருந்த பெரிய இரும்பு கம்பியால் அடித்து  கருப்பு பிளாஸ்டிக் பையில் அடைத்து  ஆற்று கரையோரம் வீசி விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில், அந்த இரண்டு நடிகைகள் தற்போது பிஸியாக நடித்து வரும் இரண்டு சீரியல் நடிகைகள் என்று ஒரு தகவல் இணையத்தை வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றது.

---- Advertisement ----