“என் அம்மா தே**வா…?..” – பீச்சில் பயில்வானை வெளுத்து வாங்கிய ராதிகா..! – தீயாய் பரவும் வீடியோ..!

தனது தாயை பற்றி அவதூறாக பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதனை ( Bayilvan Ranganathan ) பொது இடத்தில் வைத்து நடிகை ராதிகா ( Raadhika Sarathkumar ) வெளுத்து வாங்கிய உள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

இதைத்தொடர்ந்து பயில்வான் மீண்டும் ராதிகா குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். தற்போது இது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார்.

Dark Side-ஐ வெளுக்கும் பயில்வான்..

பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்களின் வெளியில் தெரியாத கருப்பு பக்கங்களை பகிரங்கமாக பேசி வருகிறார்.

அந்த கால நடிகர் நடிகைகள் முதல், இந்த கால நடிகர் நடிகைகள் வரை பலரது Dark Side-களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். இதனால், குறிப்பிட்ட நடிகர், நடிகைகளின் ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை வசைபாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

---- Advertisement ----

ராதிகாவின் தயார் குறித்து பயில்வான்..

இந்நிலையில், தான் சமீபத்தில் இவர் நடிகை ராதிகாவையும் அவருடைய தாயாரையும் பற்றி அவதூறாக பேசி இருந்த வீடியோவை யூட்யூப் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.தனை அடுத்து ஆத்திரமடைந்த ராதிகா சமீபத்தில் திருவான்மியூர் கடற்கரையில் பயில்வானை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

கடற்கரையில் தகராறு

அது என்னவென்றால், சமீபத்தில் திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ராதிகா அவரை வழிமறித்து தன் தாயை பற்றி எப்படி அவதூறாக பேசி இருக்கிறாய்? என தகாத வார்த்தைகளால் சண்டை போட்டிருக்கிறார்.

பின் பயில்வான் ரங்கநாதன், ராதிகாவிடம் நேருக்கு நேர் நின்று மோதி இருக்கிறார். அப்படியே இவர்கள் சண்டை முற்றியது. இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார். ராதிகா என்னிடம் கடற்கரையில் சண்டை போட்டது உண்மை தான்.

நான் சொன்னது பொய் என்றால் கோர்ட்டில் வழக்கு தொடருங்கள். அதை விட்டுவிட்டு இப்படி பொது இடத்தில் இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.

---- Advertisement ----