ஆண்கள் ரெண்டே நிமிஷத்துல முடிச்சுடுவாங்க.. ஆனா.. பெண்கள்.. ரச்சிதா மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

ஆண்கள் ரெண்டே நிமிஷத்துல முடிச்சுடுவாங்க.. ஆனா.. பெண்கள்.. ரச்சிதா மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

டிவி சீரியல் நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரக்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி 3ம் பாகம் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

பிரிவோம் சந்திப்போம், இளவரசி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் நடித்த ஒரே படம் உப்புக்கருவாடு. அதன்பின் படங்களில் நடிக்கவில்லை.

ரச்சிதா மகாலட்சுமி..

ரக்சிதா மகாலட்சுமி பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான தோற்றத்தில் லட்சணமாக இருப்பவர். அதனால் அவரை பார்த்த சில விநாடிகளில் பலருக்கும் பிடித்துப் போய் விடுகிறது.

அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக ரக்சிதா மகாலட்சுமி இருந்து வருகிறார்.

சீரியல் நடிகர் தினேஷை காதலித்த திருமணம் செய்த ரக்சிதா மகாலட்சுமி, சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். ஆனால் மீண்டும் கணவருடன் சேரப் போவது இல்லை என்று உறுதியாக இருக்கிறார்.

கடந்த 2022ம் ஆண்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அவரிடம் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அதிக ஆர்வம் காட்டிய நிலையில், அவரை புறக்கணித்தார்.

தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வரும் ரக்‌ஷிதா, பெண்களுக்கு திருமணம் என்பது அவசியமே இல்லாத ஒன்று. பெண்கள் தனித்தும் வாழலாம். அதுவும் சந்தோஷமா வாழலாம் என்று கூறி வருகிறார்.

ஆண்களுக்கு ரெண்டே நிமிஷம்..

நடிகை ரச்சிதா மகாலட்சுமி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர், இந்த காஸ்ட்யூமுக்காக நான் படுற பாடு எனக்குதாங்க தெரியும். சத்தியமா ஒரு பெண்ணாக இருந்து என்னவெல்லாம் கஷ்டப்படுகிறோம்.

ஆண்களைப் பொறுத்தவரை அவர்களுடைய உடையை அணிவதற்கு இரண்டே நிமிடம் தான். அதற்குள் முடித்து விடுகிறார்கள்.

ஆனால் பெண்களுக்கு அப்படி கிடையாது. 15 நிமிடங்கள் சில நேரங்களில், அரை மணி நேரம் கூட ஆகிறது.

உடை விஷயம் என்பது ஆண்களுக்கு எவ்வளவு எளிமையாக இருக்கிறது என்று நிறைய நேரம் நான் பொறாமைப்பட்டும் இருக்கிறேன். இரண்டே நிமிடத்தில் தயாராகி விடுகிறார்கள்.

ஆனால் பெண்கள் தான் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து அணிய வேண்டும் என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார் .