சுடிதார் போட்டு வந்த சுந்தரி…சொக்க வைக்கிற அழகுல வந்த ரக்சிதா மகாலட்சுமி

நடிகை ரக்சிதா மகாலட்சுமி (rachitha mahalakshmi) மீண்டும் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார். தினமும் இவரது படங்களை காண ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். அவர்களை, குஷிப்படுத்தும் விதமாக, புதுப்புது கெட்டப்புகளில் வந்து அசத்துகிறார் ரக்சிதா.
பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்கிற அமர்க்களமான முக லட்சணத்தில், ரக்சிதா இருக்கிறார்.. பிரபலமான சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பேமஸ் ஆக இருக்கிறார்.

#image_title

பெங்களூருவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பிஸியாக ஆக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், பெரிய அளவில் சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனெனில், இவரது குடும்ப குத்துவிளக்கு தோற்றம், எல்லா படங்களுக்கும் பொருந்தாது என்பதுதான்.

#image_title

இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, கீதாஞ்சலி, நாம் இருவர், நமக்கு இருவர் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரது கணவர் பெயர், தினேஷ். பிரிவோம்,சந்திப்போம் சீரியலில் இருவரும் ஒன்றாக நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துக் கொண்டனர். நாச்சியார்புரம் என்ற சீரியலில் இருவரும் நடித்த போது, ஏற்பட்ட மனக்கசப்பால், இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்போது, தனது பெற்றோருடன் ரக்சிதா வசித்து வருகிறார்.

#image_title

சினிமா படங்கள், டிவி சீரியல்களை காட்டிலும் சமீபத்தில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்ற வகையில், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார் ரக்சிதா. பெண் போட்டியாளர்களில் டாப் அழகியாக, பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்தார். பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டாலும், வீட்டுக்குள் நடந்த சண்டை சச்சரவுகளில் சிக்கிக்கொள்ளாமல் அமைதி காத்தார். இதை, சக போட்டியாளர்களே, அவரை கிண்டல் செய்தனர்.

#image_title

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர், இவர் மீது காதல் கொண்டு பின்னாலேயே சுற்றித் திரிந்தார். அவரை காதலிப்பதாகவும் ஜாடை மாடையாக சொல்லிப் பார்த்தார். ஆனால், ரக்சிதா அசைந்து கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில், அவர் கதறி கதறி அழுததைப் பார்த்து ஆறுதல் சொன்னார் ரக்சிதா. இதுவெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது வைரலாக பரவியது..

--Advertisement--

#image_title

ரக்சிதா, அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். இந்த முறை சுடிதாரில் இருக்கும் தனது புகைப்படங்களை, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றறம் செய்திருக்கிறார் ரக்சிதா. அந்த அழகில், சொக்கிப் போய் லைக் பட்டன்களை விரல் வலிக்க வலிக்க அழுத்திக்கொண்டே இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.