முதல் கணவர் மர்ம மறைவு… ராஜபக்சேவின் அனுபுகிரிய ராதிகா.. இலங்கையில் பல கோடி சொத்து..

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையான ராதிகா எம் ஆர் ராதாவின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இவர் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் , அரசியல்வாதி, ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் உள்ளிட்ட பல தொழில் கையில் வைத்திருப்பவர்.

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.

இவர் முதன் முதலில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் தான் ஹீரோயின் ஆக நடித்து அறிமுகமானார்.

--Advertisement--

ராதிகாவின் அறிமுகம்:

இந்த படத்தில் ராதிகா நடிக்க வரும்போது அவருக்கு சுத்தமாக தமிழே தெரியாது. அவருக்கு ஆங்கில மொழி மட்டுமே தெரிந்திருந்தது.

அந்த சமயத்தில் அவருக்கு அவருக்கு டயலாக் சொல்லிக் கொடுத்தது தமிழ் கற்றுக் கொடுத்தது எல்லாமே பாரதிராஜா தான்.

அவர் இல்லை என்றால் அன்றே ராதிகா சினிமா விட்டு போயிருப்பார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த சுதாகருடன் ராதிகா நட்பாக பழகி பின்னர் காதலிக்க துவங்கி இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூட முடிவெடுத்தார்கள்.

முதல் காதல்:

ஆனால் அதற்குள் ராதிகா தமிழ் தெலுங்கு என பிசியாகிவிட்டார். சுதாகர் தெலுங்கு படங்களில் பிரபல ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் அவர்களுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் நடிக்கவே நேரம் இல்லாதால் காதலிக்கவும் நேரமில்லாமல் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

தொடர்ந்து ராதிகா தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார். நடிகை ராதிகா எம் ஆர் ராதாவின் மூன்றாவது மனைவி கீதாவுக்கு பிறந்த மகள்.

ராதிகாவின் அம்மா கீதா இலங்கையில் பிறந்தவர் அவருக்கு சிங்களம் நன்றாக பேச தெரியும். நடிகை ராதிகா பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆன பிரதாப் போத்தனை காதலித்தார்.

பிரதாப் போதன் உடன் விவாகரத்து:

பிரதாப் போதன் கேரளாவில் பல கோடி சொத்து வைத்திருப்பவர். அந்த சமயத்தில் ராதிகாவும் பிரதாப் போத்தனும் இணைந்து “மீண்டும் ஒரு காதல் கதை” என்ற படத்தை தயாரித்தார்கள்.

இந்தப் படத்தை எழுதி இயக்கிய பிரதாப் போத்தனுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான இந்திய தேசிய விருது கிடைத்தது.

அந்த விருது அறிவிக்கப்பட்டதும் இருவருக்குள்ளேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் பிரதாப் போத்தன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

முதல் கணவர் மர்ம மறைவு;

அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். பிரதாப் போத்தனை விவாகரத்து செய்த பிறகு இங்கிலாந்தை சேர்ந்த இலங்கைவாழ் ரிச்சர்ட் கார்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ராதிகா.

ரிச்சர்ட் மற்றும் ராதிகாவுக்கு பிறந்த பெண் குழந்தை தான் ராயன் ஹார்டி. அவருடன் சில வருடம் ராதிகா சேர்ந்து வாழ்ந்தார். பின்னர் அவர் என்ன ஆனார்? எங்கு போனார்? என தெரியவில்லை.

திடீரென விவாகரத்து செய்துவிட்டேன் என்னுடைய இரண்டாவது கணவரை என ராதிகாவும் அறிவித்துவிட்டார்.

அதன் பிறகு ராதிகாவுக்கு இலங்கையில் பல கோடி சொத்துக்கள் இப்போதும் இருக்கிறது. தொடர்ந்து அவர் இலங்கைக்கு சென்று வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

ராஜபக்சேவுடன் ராஜ விருந்தில் ராதிகா:

இதனிடையே இலங்கை அதிபராக ராஜபக்சேவின் அரசு மரியாதைக்குரிய விருந்தினராக இப்போதும்ராதிகா சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அது மட்டும் இல்லாமல் விசா இல்லாமலே அவர் இலங்கைக்கு சென்று வருவார்.

இதனால் தான் அவர் இலங்கை தமிழர் விஷயத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிராகவே கருத்துக்கள் பேசி வந்தார்.

அதன் பிறகு நடிகரும் அரசியல்வாதிகமான சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டு பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தர சரத்குமார் திருமணம் செய்வதற்கு முன்னதாக ராதிகா இரண்டு முறை திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.