எது குதிரைன்னே தெரியலையே..! – ரஜிஷா விஜயன் வெளியிட்ட புகைப்படங்கள்..! குழம்பிய ரசிகர்கள்..!

எது குதிரைன்னே தெரியலையே என்று புலம்பி வருகிறார்கள் நடிகை ரஜிஷா விஜயன் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணாக தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த படத்திற்கு முன்பே இரண்டு மலையாள படங்களில் நடித்திருக்கிறார். அதன்மூலம் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமும் உருவானது. மட்டுமில்லாமல் சிறந்த அறிமுக நடிகைக்கான மாநில விருது என்ற விருதையும் கேரள அரசு இவருக்கு கொடுத்து கௌரவித்தது.

கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கர்ணன் திரைப்படத்தில் இவருடைய ஏதாவது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

ஜெய்பீம் படத்திலும் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் இருந்தாலும் கூட இவருடைய நடிப்பு திறமை ரசிகர்களை இவரை இன்னும் ஒருபடி மேலே ரசிக்க செய்தது.

இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

---- Advertisement ----

தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும் கூட தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான உடைகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்போது வெளியிட்டு இருக்கும் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எது குதிரைன்னே தெரியலையே…? என்று குழம்பி வருகின்றனர்.

---- Advertisement ----