நடிகர் ராஜ்கிரண் மனம் மாறி மணமக்களை ஏற்றுக்கொள்வாரா..? – இது தான் விஷயம்..!

 ஆரம்ப காலத்தில் கதாநாயகனாக நடித்து வந்த ராஜ்கிரண் அதன் பின்னர் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமான லுக்கில் இருந்தாலும் இவர் நடிப்பில் கில்லி. இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து இருக்கிறாரோ அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கக் கூடிய ஆற்றல் இவருக்கு உள்ளது.

 சமீபத்தில் இவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பரவியதால்  வேறு வழியில்லாமல் இவர் ஒரு சில வார்த்தைகள் பேசி அறிக்கைகளை விட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட அந்த பெண் இவரது பெண்ணல்ல வளர்ப்பு மகள் என்ற உண்மையை போட்டு உடைத்தார்.

 தன் குடும்பத்தாரையும் தன்னையும் ஏமாற்றிய தனது வளர்ப்பு பெண்ணை திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை யோக்கியமான அல்ல என்றும் பணத்திற்காக தனது மகளை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். எனவே இந்த திருமணத்தில் அவருக்கு உடன்பாடு கிடையாது என்றும் இனிமேல் அவர்களுக்கும் என் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று மிகவும்  உணர்ச்சிபூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.

 இதனைத் தொடர்ந்து இவரது வளர்ப்பு மகனான ஜீனத் பிரியா தற்போது இவரது தாயாரை தொடர்புகொண்டு தங்களை குடும்பத்தோடு சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். பெண்ணின் மேல் அதிக பாசம் வைத்துள்ள அவர் அம்மாவும் தனது கணவனிடம் இவர்களை சேர்த்துக் கொண்டால் என்ன என்பது போன்ற கேள்விகளை தற்போது கேட்டு வருவதால் விரைவில் கல்லாக இருக்கும் ராஜ்கிரண் மனது கரைந்து தன் மகளை தன்னோடு சேர்த்துக் கொள்வார் என்று திரை துறை வட்டாரங்கள் கூறி வருகிறது.

 அப்படி தன் மகளை சேர்த்துக்கொள்ளும் கூடிய பட்சத்தில் மாப்பிள்ளையான முனீஸ்காந்த் கண்டிப்பாக திரைப்பட வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து அவரை மிக நல்லமுறையில் தூக்கி விடுவார் என்றும் பரபரப்பாக சமூகவலைதளங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது.

---- Advertisement ----

 இதனை அடுத்து கல் மனதோடு இருக்கும் ராஜ்கிரண் குறைவாக மகளை சேர்த்துக் கொள்ளாமல் தவிக்க விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

---- Advertisement ----