ரம்யா கிருஷ்ணன், (Ramya Krishnan) தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த நடிகையாக வலம் வருபவர். நீலாம்பரி, ராஜமாதா சிவகாமி கேரக்டர்களில் ரம்யா கிருஷ்ணனை தவிர்த்து வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாது என கூறும் அளவுக்கு படையப்பா, பாகுபலி படங்களில், நடிப்பில் அதகளம் செய்தவர்.
கடந்த 1985ம் ஆண்டில், இயக்குநர் ராஜேசகர் இயக்கி, சிவாஜிகணேசன் – ரஜினிகாந்த் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில், ரம்யா கிருஷ்ணன் அறிமுகமானவர். ரஜினியின் தம்பிக்கு, ஜோடியாக நடித்திருப்பார்.
இதையடுத்து, இயக்குநர் மணிவண்ணன் இயக்கிய ‘முதல் வசந்தம்’ படம், இவருக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்களிடம் தந்தது. ‘ஆறும் அது ஆழம் இல்லே, அது சேரும் கடலும் ஆழம் இல்லே’ பாடல் மிக பிரபலமடைந்தது. அந்த பாடல் காட்சியில், சந்திரசேகர், இவரை பார்த்துதான் பாடுவார். முதல் வசந்தம் படம் செம ஹிட் ஆனது. சத்யராஜூக்கு, நல்ல பிரேக் கிடைத்தது.
அடுத்து, ‘ கேப்டன் பிரபாகரன்’ படத்தில் சரத்குமார் காதலியாக நடித்து, ‘ஆட்டமா, தேரோட்டமா’ பாடல் மூலம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ரம்யாகிருஷ்ணன்.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘ படையப்பா’ படம், ரம்யாகிருஷ்ணன் சினிமா பயணத்தில், திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இதில், ரஜினியை எதிர்க்கும் வில்லி கேரக்டரில், ‘நீலாம்பரி’யாக வாழ்ந்திருப்பார். தொடர்ந்து பாட்டாளி, வாஞ்சிநாதன், பஞ்சதந்திரம், பாறை, பட்ஜெட் பத்மநாபன், அன்னை காளிகாம்பாள், ஆம்பள, தானா சேர்ந்த கூட்டம் என பல படங்களில் ரம்யாகிருஷ்ணன், நல்ல நடிப்பை தந்தவர்.
குறிப்பாக, ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தில், ராஜமாதா சிவகாமி தேவியாக, ரம்யாகிருஷ்ணன் நடிப்பு, ‘அடேங்கப்பா’ என பலரையும், வியப்படையச் செய்தது என்றால் அது மிகையல்ல. பெண்களை மட்டுமின்றி, ஆண்களையும் தன் கம்பீர நடிப்பால் கட்டிப்போட்டிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.
தமிழ் சினிமாவை பொருத்த வரை நடிப்பிலும் சரி, கவர்ச்சியிலும் சரி பாகுபாடின்றி தன்னை வெளிப்படுத்தியவர் ரம்யாகிருஷ்ணன். பஞ்ச தந்திரம் படத்தில், ‘மேகி’ கால் கேர்ள் கேரக்டரில், நடித்திருப்பார்.
நரசிம்மா படத்தில், ஒரு பாடல் காட்சியில், கேரளத்து பைங்கிளியாக உச்சக்கட்ட கவர்ச்சியில் வந்து ரசிகர்களை திணறடித்து இருப்பார். ‘லாலா நந்தலாலா வாவா.. சின்னத்தேரில் ஓடம் வந்தல்லோ…’ என்ற பாடலில், கிளர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
சமூக வலைதளங்களில், ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன், அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். வயது 52 ஆகியும், இன்னும் தனது இளமை பொங்கும் அழகுகளை வெளிப்படுத்தும் விதமாக, அந்த புகைப்படங்கள், படு கவர்ச்சியாக இருப்பதுதான் இதில் ஹைலைட்.
தற்போது கருப்புநிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில், அவர் எடுத்துள்ள புகைப்படங்களில் பளீரிடும் உடல் அழகை பார்த்து, ரசிகர்கள் வாய்பிளந்து ரசிக்கின்றனர். 52 வயதிலும் இப்படி ஒரு கட்டுக்குலையாத மேனியா, என வியந்து போகின்றனர்.
படையப்பா படத்தில், ரஜினியை பார்த்து இவர் சொல்லும் வசனம், ‘ வயசானாலும், உன் அழகும், ஸ்டைலும் இன்னும் குறையல’ என்பதுதான். அதே வசனம் ரம்யாகிருஷ்ணனுக்கும் பொருந்தும் என்பது போல, 52 வயதிலும் அதே அழகில், இளமையில் ரசிகர்களை வசீகரிக்கிறார்.
உள்ளே இருப்பது, அப்படியே அப்பட்டமாக தெரியும் இந்த கிளாமரான புகைப்படங்கள் இப்போது, செம வைரலாகி வருகின்றன. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.