ஆளை விடுங்கடா யப்பா.. கையெடுத்து கும்பிட்டு ஓடிய ராஷ்மிகா மந்தனா..! என்ன ஆச்சு..!

இன்றைய தலைமுறை இளைஞர்களின் கிரிஷ் யார் என்றால் ராஷ்மிகா மந்தானா என்பதை எல்லோரும் பட் என்று சொல்லிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தானா கையெடுத்து கும்பிட்டு விமான நிலையத்தில் ஓடிய விஷயம் வைரலாகியுள்ளது.


தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் ராஷ்மிகா தற்போது ரசிகர் படையை வைத்திருப்பவர். இதனை அடுத்து அண்மையில் தான் இவர் பாலிவுட்டில் களம் இறங்கி அனிமல் படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ராஷ்மிகா மந்தனா..

அனிமல் படத்தில் அத்துமீறிய லிப் லாக் காட்சிகளில் நடித்ததை அடுத்து ரசிகர்கள் மத்தியில் கலவை ரீதியான விமர்சனங்கள் கிளம்பியதோடு ஹிந்தி படத்தில் என்றால் அவ்வளவு தாராளம் காட்டும் இவர் தென்னிந்திய மொழிகளில் காட்டவில்லையே என்று ரசிகர்கள் கோபம் அடைந்தார்கள்.

மேலும் அனிமல் படத்தின் வெற்றியை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினியாக நடிக்க கமிட் ஆகி இருப்பதார்.
மேலும் தமிழில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


நடிகை ராஷ்மிகா மந்தானா ஆரம்பத்தில் கன்னட படத்தின் மூலம் அறிமுகமான இதனை அடுத்து விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

---- Advertisement ----

இதை அடுத்த தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தென்னிந்திய மொழிகளில் கிடைக்க ஆரம்பித்தது. அந்த வகையில் புஷ்பா திரைப்படத்தில் பக்குவமாக நடித்து இந்த படம் மெகா ஹிட் திரைப்படமாக அமைய இவரது அசத்தல் நடனமும் காரணம் என கூறலாம்.

ஆள விடுங்கடா.. என்னாச்சு..

தமிழில் சுல்தான் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்தார். எனினும் சொல்லிக் கொள்ளும் படி இந்த இரண்டு படமும் இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கவில்லை.

எனவே கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள பல வகைகளை கையாண்டு வரும் இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக எப்போதும் இருப்பவர்.


புஷ்பா 1 வெற்றிக்கு பிறகு புஷ்பா 2 படமும் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தில் இவர் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.

கை எடுத்து கும்பிட்டு ஓடிய ராஷ்மிகா..

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தானாவின் புகைப்படம் ஒன்று வலைதளத்தில் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.

இதற்கு காரணம் விமான நிலையத்தில் அவரை பத்திரிக்கை,யாளர்கள் புடை சூடிக்கொள்ள பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமே என்று நினைத்து கும்பிடு போட்ட படி அங்கிருந்து வேகமாக கடந்து சென்றார்.

ராஷ்மிகா மந்தானா எப்போதும் பத்திரிக்கையாளர்களை பார்த்தால் நல்ல போஸ் கொடுத்து பேசக்கூடிய இவர் ஏன் இப்படி செய்தார் என்று தெரியாமல் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.


அத்தோடு ஒரு சில ரசிகர்கள் விஜய தேவர கொண்டவை சேர்த்து தன்னோடு இணைத்து பேசும் கிசுகிசுக்கள் பற்றி கேள்விகளை கேட்பாரோ என்று பயந்து தான் இப்படி நடந்து கொண்டிருப்பார் என்று கமெண்ட் செய்து வருவதால் இந்த விஷயம் வைரலாகி உள்ளது.

மேலும் இந்த விஷயமானது தற்போது காட்டு தீ போல பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை பற்றி தொடர்ந்து பேசி பேசும் பொருளாக மாற்றிவிட்டார்கள்.

---- Advertisement ----