இப்போ தான் கல்யாணம் பண்ணாங்க.. அதுக்குள்ள இப்படியா..? – சோகத்தில் VJ மகாலட்சுமி ரசிகர்கள்..!

சின்ன திரை சீரியல் நடிகையான VJ மகாலட்சுமி திடீரென்று இரண்டாவது முறையாக தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட விஷயம் அனைவரும் அறிந்ததே. இந்த இரு ஜோடிகளும் அதையடுத்து பல யூடியூப் சேனல்களுக்கு தரமான பேட்டியை கொடுத்திருந்தார்கள்.

ரவீந்தரின்ன் உருவத்தைப் பார்த்து கேலியாகவும் கிண்டலாகவும் எதிர்பாராத பல கேள்விகளை கேட்ட போதும் ரவீந்தர் மிக பொறுமையாக விளக்கமாக பதிலளித்தது அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. இந்த நிலையில் இது புரட்டாசி மாதம் என்பதால் ரவீந்தரின் அம்மா சமையல் செய்து கொடுக்க அதை அவர் ஒரு டெலிவரி பாய் சுமந்துகொண்டு  மகாலட்சுமி இருந்த சூட்டிங் ஸ்பாட்டில் கொடுத்திருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்கி திருமணத்திற்குப் பிறகு பரபரப்பாக பேசப்பட்டார்கள். ஆனால் அதைவிட மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட அவர்களின் பட்டியலில் இவர்களின் பெயர் இருந்து வருகிறது. தற்போது இவர்கள் பற்றிய செய்திகள் வைரலாக இணையதளத்தில் பரவி வந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து சில போட்டோக்களை மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் தம்பதி வெளியிட்டிருக்கிறார்கள். அந்த போட்டோவில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் திருமணம் முடிந்தபின் தாலி பிரித்து கோர்த்தல் நடக்கும் அல்லவா. அந்த நிகழ்வு தான் தற்போது மகாலட்சுமிக்கு நடந்து உள்ளது.

அதை அவர்கள் மிகவும் சீரும் சிறப்புமாக செய்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்களை தான் இவர் இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

---- Advertisement ----

மேலும் இந்த தாலி பிரித்து கோர்த்தல் புகைப்படத்தை பார்த்த  இவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் இவருக்கு வாழ்த்துக்களை கூறி விருகிறார்கள். இப்புகை படத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் ஜோடியாக பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.இதனை அறிந்த ரசிகர்கள், பிக்பாஸ் வீட்டுக்குள்ள போய் சண்டை போடாம இருந்தவங்க என்ற யாருமே வரலாற்றில் இல்லை. இப்படி இருக்கும் போது இப்போ தான் கல்யாணம் ஆன இருவரையும் பிக்பாஸ் வீட்டுக்குள் போனால்.. சரியா இருக்குமா..?

இப்போ தான் கல்யாணம் பண்ணாங்க.. அதுக்குள்ள இப்படியா..? என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்கிறோமா..? என்ற பதிலை இன்னும் ரவீந்தர் மற்றும் மகாலட்சும் என இருவருமே கூறவில்லை. ஒருவேளை இவர்கள் பிக்பாஸில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற விதத்தில் ரசிகர்களின் சிந்தனை தற்போது உள்ளது.

---- Advertisement ----