5 புருஷன்.. விவாகரத்து.. கேன்சர்.. காமெடி நடிகை பிரியங்காவின் கண்ணீர் கதை..

5 புருஷன்.. விவாகரத்து.. கேன்சர்.. காமெடி நடிகை பிரியங்காவின் கண்ணீர் கதை..

சினிமாவில் காமெடி என்பது மிக முக்கிய பங்கினை வகிக்கும். படம் முழுவதும் காமெடி ட்ராக் இருந்தால் அந்த படம் எளிதில் வெற்றியடையும். அந்த வகையில் காமெடி நடிகையான பிரியங்காவின் கண்ணீர் கதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: இந்த பழம் தான் உங்கள் பசியை போக்கும்.. மோசமான வீடியோவை வெளியிட்ட கிரண்..!


தமிழ் சினிமாவில் பெண் காமெடியன்கள் மிக குறைவான அளவில் தான் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் விரல் விட்டு எண்ணி சொல்லிவிடலாம். அந்த வகையில் மனோரமா ஆச்சி, கோவை சரளாவிற்கு அடுத்ததாக பெரிய இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட 90 கிட்ஸ் இன் பிரியமான காமெடி நடிகை தான் பிரியங்கா.

காமெடி நடிகை பிரியங்கா..

செந்தில், கவுண்டமணி, சந்தானம், வடிவேலு, யோகி பாபு என்று பல காமெடி நடிகரோடு இணைந்து நடித்தவர் இவர். 1996 ஆம் ஆண்டு வெளி வந்த காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு என்று கொடுத்தார்.

குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு காமெடி கதாபாத்திரம் கிடைத்ததை அடுத்து நடிகர் வடிவேலு ஒரு இணைந்து பல படங்களில் நடித்து அசத்தியவர்.


இவர் பெயர் சொல்லி அழைத்தால் யாருக்கும் அதிகம் நினைவிருக்காது ஆனால் அர்ஜுன் நடிப்பில் வெளி வந்த மருதமலை திரைப்படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் காமெடிகள் வரும் பெண்ணை ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டால் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து இவரைப் பற்றி சொல்லுவார்கள்.

ஐந்து புருஷன் விவாகரத்து..

வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சின்ன திரையில் என்ட்ரி கொடுத்து சீரியல்களில் வில்லியாக கலக்கி வரும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் தனது வில்லத்தனத்தை காட்டி அனைவரையும் திகைக்க வைத்தார்.

மேலும் ஐந்து கணவரோடு இருக்கக்கூடிய காமெடி சீனில் கூட இவர் வடிவேலு உடன் இணைந்து நடித்திருந்தது இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.


எப்போதுமே பலரை சிரிக்க வைத்த இவரது உண்மை வாழ்க்கை சற்று கசப்பானது தான். திருமணத்திற்கு பிறகு இவருடைய திரை உலக வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டது என்று சொல்லலாம்.

இதனை அடுத்து எட்டாம் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். இவர் திரை உலக வாழ்க்கையை தனது அக்காவின் கணவரின் மூலம் ஆரம்பித்து இருக்கிறார். ஆரம்பத்தில் ஆங்கராக நடிக்க ஏவிஎம் ஸ்டுடியோ சென்ற இவர் அதனைத் தொடர்ந்து பல படங்கள் மட்டுமல்லாமல் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

பிரியங்காவின் கண்ணீர் கதை..

திருமணத்திற்கு பிறகு தஞ்சாவூரில் செட்டிலான இவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார். மீண்டும் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து கணவர் இவரை மிகவும் திட்டியதோடு மட்டுமல்லாமல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து விவாகரத்திற்கு விண்ணப்பித்திருக்கும் விஷயத்தை இவரை சிரித்த வண்ணம் சொல்லி இருக்கிறார். மீண்டும் நடிப்பதற்கு காரணம் அவர் அம்மாவிற்கு ஏற்பட்ட கேன்சர் என்பதை சொல்லி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.


இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக மாறி இருக்கும் இவர் அதற்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் ஆனால் அந்த குழந்தை இறந்து விட்டது. தனது அம்மாவுக்காக தான் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருப்பதை உணராத அவரது கணவர் இவரை பல்வேறு வகைகளில் டார்ச்சர் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: கீழ ஒண்ணுமே போடாமல் லோ ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்து சூடேற்றும் துஷாரா விஜயன்..!

இந்த விஷயம் தெரிந்து கொண்ட பல ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கரம் நீட்டி இருப்பதோடு இவருக்கு ஊக்கம் தரக்கூடிய வகையில் பேசி இருப்பதால் இவர் உற்சாகத்தோடு இருக்கிறார்.