ரசிகரின் “அந்த”ஆசைக்கு உடனே ‘ஓகே’ சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..! – ஆனா… இது தான் கண்டிஷனாம்..!

ரேஷ்மா பசுபுலேட்டி (Reshma Pasubuleti) இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி நாயகியாக கலக்கி கொண்டு இருப்பவர். இவரது அப்டேட் செய்யாமல், இருந்த நாட்களே இல்லை என்னும் அளவுக்கு, அம்மணி இன்ஸ்டாவில், தினமும் நேரத்தை செலவிடுகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பக்கம் செல்லாமல், இவரது பொழுதே விடியாது என்றும் சொல்லலாம்.

விஜய் டிவியில், பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்தும் ரேஷ்மா பசுபுலேட்டி, தற்போது ஜீ தமிழில், சீதா ராமம் என்ற தொடரிலும் நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி தொடரில் வில்லி கேரக்டரில் நடிப்பதை போலவே, சீதா ராமம் தொடரிலும், இவர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.ரேஷ்மா, நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி என்பது கூடுதல் தகவல், மேலும், இவர் வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி
Reshma Pasubuleti

ரேஷ்மா பசுபுலேட்டி, தனது அழகை, கவர்ச்சியை அடிக்கடி புகைப்படங்களாக, வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தன் உடல் அழகை, வனப்பை, வாளிப்பான தேகத்தை இன்னும் கூடுதலான அழகுடன், கவர்ச்சியாக காட்டும் அரைகுறை ஆடைகளில் வந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார்.

அந்த வகையில், லட்சக்கணக்கான ரசிகர்கள், ரேஷ்மாவை பாலோயர்ஸ் ஆக பின் தொடர்கின்றனர். அதற்காகவே, ஸ்பெஷல் ஷூட் நடத்தி தனது வீடியோ, புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்கிறார். அவ்வப்போது லைவ் வீடியோவில் வந்து ரசிகர்களை சந்தித்து பேசுகிறார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்கிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி
Reshma Pasubuleti

அந்த வகையில், சமீபத்தில் வந்த லைவ் வீடியோவில், ரேஷ்மாவிடம் பேசிய ரசிகர் ஒருவர், உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், என தனது ஆசையை வெளிப்படுத்தினார். அதற்கு உடனடியாக பதில் அளித்த ரேஷ்மா, எனக்கு திருமணம் செய்துகொள்ள சம்மதம்தான். ஆனால், அதற்கு அம்மா சம்மமதிக்க மாட்டார், எனக் கூறி இருக்கிறார்.

ஏனெனில், ரேஷமா பசுபுலேட்டி 18 வயதிலேயே திருமணம் ஆனவர். முதல் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட, 2வது திருமணம் செய்த நபரும் மோசடி பேர்வழியாக இருந்து, ரேஷ்மாவை அடித்து, உதைத்து டார்ச்சர் செய்துள்ளார்.

ரேஷ்மா பசுபுலேட்டி
Reshma Pasubuleti

அந்த நபரையும், ரேஷ்மா பிரிந்துவிட்டார். ஆனால், அந்த கொடுமைகளை அவர் அனுபவித்த போது, தான் கர்ப்பிணியாக இருந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வகையில், தனது கடந்த கால வாழ்க்கையை, மக்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டவர் ரேஷ்மா.

ஏற்கனவே, திருமண வாழ்க்கையில் பலத்த அடி வாங்கியவர் என்பதால்தான், திருமணம் செய்துகொள்வதாக விருப்பம் தெரிவித்த ரசிகருக்கு, எனக்கு திருமணம் செய்துகொள்ள சம்மதம்தான், ஆனால், தனது அம்மா அதற்கு சம்மதிக்க மாட்டார் என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி
Reshma Pasubuleti

ஏற்கனவே நடந்த திருமணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரேஷ்மாவுக்கு, அவரது அம்மா, மீண்டும் திருமணம் செய்து வைக்க மாட்டார் என்பதும் உறுதியாகிறது.

திருமணம் செய்ய வேண்டாம். இப்படியே சீரியலில் நடித்துக்கொண்டு எங்களுக்கு இன்ஸ்டாவில் உங்களது வீடியோவை, புகைப்படங்களை அப்டேட் செய்துகொண்டே இருங்கள், அதுவே போதும் என, ரசிகர்கள் பலரும் கமெண்டுகளில் கூறி வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.