ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம்.. உதவியளாரின் சம்பளம் மட்டும் இவ்வளவா..? ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன்டாக்…!

ரேஷ்மா பசுபுலேட்டி மிகச்சிறந்த மாடல் அழகியாகவும் தொகுப்பாளினியாகவும் வழங்கியவர் இவர் பாபி சிம்ஹா உறவினர் ஆவார்.
இது தமிழ் மலையாள மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் மீ டு இயக்கத்தின் ஆதரவாளராக திகழ்ந்தவர். மேலும் இவர் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. எனவே சோசியல் மீடியாக்களில் இவரை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனினும் சினிமா வாய்ப்புகள் வந்து சேரவில்லை.

எனவே சின்னத்திரையில் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய வரும் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.


இதையும் படிங்க: என் படம் வரக்கூடாதுன்னு சொல்றது நீ யார்..? உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்தை விளாசும் விஷால்..!

அடுத்து சன் டிவி சீரியல் ஆன வாணி ராணி, 10 மணி கதைகள், மரகதவீணை போன்ற தொடர்களில் நடித்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான உயிர்மெய் தொடரில் சுமதி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இதனை அடுத்து ராஜ் தொலைக்காட்சியில் என் இனிய தோழியே என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார்.

விஜய் டிவியை பொறுத்த வரை ஆண்டாள் அழகர் தொடரில் நடித்திருக்கும் இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபத்திரத்தை சிறப்பாக செய்து வருகிறார்.

இந்த சீரியலில் இவரது பிரமிக்கத்தக்க நடிப்பை பார்த்து இல்லத்தரசிகள் இவருக்கு பெருத்த ஆதரவை தந்திருப்பதோடு சில இளைஞர்களையும் இந்த சீரியலை பார்க்க வைத்த பெருமை இவரை சாரும்.

சமூக வலைதளங்களிலும் படுபிஸியாக இருக்கக்கூடியவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பதில் வல்லவர்.

ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம்..


மேலும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி எந்த விதமான கூச்சமும் இல்லாமல் எதையும் வெளிப்படையாக சொல்லி ரசிகர்களை திணறடிக்க வைக்க கூடிய இவர் அண்மை பேட்டியில் சொன்ன விஷயம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் நடிகை ரேஷ்மா சுவாரசியமான பல விஷயங்களை பலருக்கும் புரியக்கூடிய வகையில் நேர்த்தியான முறையில் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக இவருடைய சம்பளம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அற்புதமாக பதில் அளித்திருக்கிறார்.

அந்த வகையில் இவரது ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று கேட்கப்பட்ட நிலையில் ஒரு நாளைக்கு நான் லட்சங்களில் சம்பளம் வாங்குகிறேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள்.

அட.. உதவியாளருக்கு இவ்வளவா..

அது மட்டுமில்லாமல் இவருக்கு ஒரு நாளைக்கு லட்சங்களில் சம்பளம் என்றால் தன்னிடம் வேலை பார்க்கும் உதவியாளருக்கு ஒரு மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்லி இருக்கும் விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதையும் படிங்க: என்னுடன் படுக்கையை பகிற வேண்டுமா..? மோசமான கேள்வி காலா பட நடிகை நச் பதிலடி..!

மேலும் இந்த விஷயம் இணையத்தில் பேசும் பொருளாக மாறி இது போல வேலை செய்ய கூடிய நபர்களுக்கு தேவை அறிந்து பணத்தை தரக்கூடிய முதலாளிகள் ஒரு சில பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்பதை குறிப்பாக ரசிகர்கள் உணர்த்தி இவர் தனது உதவியாளருக்கு கொடுக்கும் சம்பளத்தை சூப்பர் என்று சொல்லி பாராட்டு இருக்கிறார்கள்.