என்னால் அப்படி இருக்க முடியாது.. So, கல்யாணம் பண்ணிக்கல.. – நடிகை சதா..! – என்ன இப்படி சொல்லிட்டாங்க..!

நடிகை சதா தன்னுடைய திருமணம் குறித்தான சில விஷயங்களை இணையத்தில் இணைய ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தில் சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பார் விருது இவருக்கு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அதே படத்தை 2003 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி வைத்து இயக்குனர் மோகன்ராஜா இயக்கியிருந்தார். ஹீரோயினை மாற்றாமல் நடிகை சதாவையே ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே சுதாவின் மார்க்கெட் சூடு பிடித்தது. தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி ஏழு படங்களில் நடித்த இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இடையில் கடந்த 2018 ஆம் ஆண்டு டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்த அவர் அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் சினிமாவில் நடிக்கவே இல்லை. தற்போது அஹிம்சா என்ற தெலுங்கு படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி இவரிடம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து நடிகை சதா கூறியதாவது, வாழ்க்கையின் நோக்கம் என்பது சந்தோஷமாக இருப்பது தான்.

திருமணம் செய்து கொண்டால் தான் சந்தோஷம் கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை. நீங்கள் தனியாக இருக்கும்போது நீங்கள் சந்தோஷமாக வாழலாம். உங்களுக்காக இந்த வாழ்க்கை இருக்கிறது.

ஆனால், திருமணம் செய்து கொள்ளும்போது மனைவி கணவனுக்காக சில விஷயங்களை விட்டுக்கொடுத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள் வாழ வேண்டியிருக்கிறது. கணவன் மனைவிக்காக சில விஷயங்களை விட்டுக்கொடுத்து குறிப்பிட்ட வட்டத்துக்குள் வாழ வேண்டியிருக்கிறது.

என்னால் அப்படி இருக்க முடியாது அதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒருவேளை நான் திருமணம் செய்து கொண்டால் என்னை திருமணம் செய்ய உள்ள நபர் சுத்த சைவமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை சதா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …