ப்ரா போடல.. பாத்துக்கோங்க..! – மார்புக்கு நடுவே வைர நகையை தொங்க விட்டு சமந்தா ஹாட் போஸ்..!

நடிகை சமந்தா, கொஞ்சும் அழகியான நடிகையாக இருக்கிறார். மேக்கப் போட்டால் மட்டுமே, சில நடிகைகள் மிக அழகாக தெரியும் நிலையில், மிக சாதாரணமாகவே மிக அழகாக தெரிபவர் சமந்தா. அடுத்த வாரத்தில், அவரது படம், சமந்தா நடிப்பில், சாகுந்தலம் படம், வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த படத்தில், ராணியாக நடித்திருக்கிறார் சமந்தா. யசோதா படத்தில் நடித்த பிறகு, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, நான்கு மாதங்களுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்படார். மருத்துவமனையிலும், வீட்டிலும் அவருக்கு பல்வேறு விதமான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் முழுமையான நிலையில், அவர் அந்த நோய் தாக்கத்தில் இருந்து குணமடையவில்லை.

எனினும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள சாகுந்தலம் படத்துக்கான புரமோசன் பணிகளில் அவரும் கலந்துகொண்டார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, இன்னும் நல்ல முறையில் படங்களில் நடிக்க விரும்புவதால், ஒத்துக்கொண்ட படங்களை முடித்த பிறகு, சிறிது காலம் முழு ஓய்வில் இருக்கப் போகிறேன், அப்போதுதான், மீண்டும் பழையபடி நல்ல ஆரோக்கியத்துடன், படப்பிடிப்புகளில் பங்கேற்று, நல்ல நடிப்பை தர முடியும், என்று கூறி இருந்தார்.

இ்ந்நிலையில், கேரள மாநிலம், ஆலப்பியில் குஷி தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் சமந்தா பங்கேற்றுள்ளார். தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை சிவா நிர்வானா இயக்குகிறார். நடிகர் ஜெயராம், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படம், வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் கலந்துகொண்டாலும் அவ்வப்போது பொதுநிகழ்ச்சிகளிலும் சமந்தா கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் பேசுகிறார். அவர் நோயால் பாதிக்கப்பட்டு, இன்னும் முழுமையாக குணமடையாத நிலையிலும், தன்னம்பிக்கையுடனும், ஒரு வித போர் குணத்துடனும் தைரியமாக தனது உடல் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார். மேலும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் அவருக்கு ஒரு வித மன உறுதியை தருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் வெண்மை நிற கோட் – சூட்டில் வெகு கெத்தாக, தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்திருக்கிறார் சமந்தா. அந்த படங்களை பார்க்கும்போது, இவ்வளவு நேர்த்தியாக, கம்பீரமாக இருக்கும் சமந்தாவுக்கு மயோசிடிஸ் போன்ற அழற்சி நோய் வந்திருக்க கூடாது என்றுதான், ரசிகர்கள் பலரும் அங்கலாய்த்து, தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

---- Advertisement ----

வரும் 28 ம்தேதி, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளிவர இருக்கிறது. அதற்கு முன்னதாக, வரும் 14ம் தேதி சமந்தா நடித்த சாகுந்தலம் படம் வருகிறது. அந்த படத்தில் குந்தவை கேரக்டரில் த்ரிஷா, இந்த படத்தில் ராணியாக சமந்தா, இருவரில் யாருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதும், இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----