“வயசானாலும் அந்த உணர்ச்சி அதிகமா இருக்கு.. இது தான் காரணம்..” – கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!

பிரபல நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ள விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. கடந்த 22 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நடிகை சமீரா ரெட்டி தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sameera Reddy

தொடர்ந்து நடுநிசி நாய்கள் வெடி வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டி அதன் பிறகு பட வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவர் ஜூனியர் என்டிஆர் உடன் அதிகா நெருக்கமாக இருக்கிறார். அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என்கிற ரீதியில் தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.

இதனால் கடுப்பான சமீரா ரெட்டி ஆளை விடுங்கடா சாமி என்று கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை இலக்கியம் ஆகிவிட்டார்.

Sameera Reddy

திருமணம் முடிந்த கையோடு இரண்டு குழந்தைகளுக்கு தாயுமான நடிகை சமீரா ரெட்டி இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டது உடல் எடை கூடிவிட்டது இப்பொழுதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு டூபீஸ் நீச்சல் உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்களே இது உங்களுக்கு சரியாக படுகிறதா என்கிற ரீதியில் ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

---- Advertisement ----

Sameera Reddy

இதனை தொடர்ந்து நடிகை சமீரா ரெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அவர் கூறியதாவது ஆம் என்னுடைய உடல் எடை கூடிவிட்டது, எனக்கு தொப்பை விழுந்துவிட்டது, என்னுடைய தொடை சதைகள் தொளதொள என இருக்கின்றன.

என்னுடைய முடி நரைத்து விட்டது, என்னுடைய முகம் மாறிவிட்டது, வயதான பெண் போல தோற்றமளிக்கிறேன். ஆனாலும், என்னை நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன்.

Sameera Reddy

என்னை நான் கவர்ச்சியாக உணர்வதற்கு என்னுடைய உடல் தடையாக இருக்கும் என நான் நம்பவில்லை. என்னுடைய மனது தான் என்னை கவர்ச்சியாக உணர்வதற்கு காரணமாக இருக்கிறது.

நான் மட்டுமல்ல யார் ஒருவரும் தங்களை கவர்ச்சியான கவர்ச்சியாகவும் அழகானவராகவும் உணர்ந்து கொள்ள அவர்களுடைய உடல் தடையாக இருக்க முடியாது அழகு கவர்ச்சி இவை இரண்டுமே ஒருவருடைய பார்வையை பொறுத்துதான் ஒருவருடைய எண்ணத்தைப் பொறுத்து தான் இருக்கிறது.

Sameera Reddy

எனக்கு பிடித்த உடைகளை அணியை நான் விரும்புகிறேன். வயதாகி விட்டாலும் கூட எனக்கு கவர்ச்சியாக உணரக்கூடிய அந்த உணர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது தவிர குறையவில்லை குறைவும் குறையாது.

என்னை நான் அழகாகவே உணர்கிறேன். கவர்ச்சியாகவே உணர்கிறேன். என பேசி இருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி. இவருடைய இந்த பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

---- Advertisement ----