என்னது.. சரண்யா இந்த கேரக்டரில் நடிக்கிறாங்களா.. சூப்பர் போங்க..!

கோலிவுட்டில் அம்மா கதாபாத்திரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன் ( Saranya Ponvannan ) தான்.

தற்போது இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்கம் புதிய படத்தில் முன்னனி கதாநாயகியாக இவர் நடிக்கிறார்.இது குறித்து படத்தின் இயக்குனர் கூறியதாவது விஷ்ணு ராமகிருஷ்ணன் கூறியதாவது, இந்த கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக இருப்பார் என்று அவரிடம் கூறினேன்.

இந்தப் படத்தில் ராஜ் வர்மா வில்லனாகவும், அம்சத் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினருக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது சரண்யா கேங்ஸ்டர் வழியை கையில் எடுக்கிறார்.

இதையும் படிங்க :

குடும்பத்துடன் அமைதியாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கையில் அவரது குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை வருகிறது. அதனை தொடர்ந்து மீண்டும் அவர் பழைய கேங்ஸ்டராக மாறி பிரச்சனையை முறியடிப்பதுதான் படத்தின் கதை.

---- Advertisement ----

சீரியஸான கேங்க்ஸ்டர் படம் என்றாலும் குடும்பம் சென்டிமெண்ட் நகைச்சுவை கலந்து படத்தை எடுத்திருப்பதாக விஷ்ணு ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சரண்யாவின் மறுபக்கம்

நான் சரண்யா ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அவர் நடிக்கும் ஸ்டீரியோடைப்பை உடைக்க விரும்பினேன், அதனால்தான் நான் அந்த கதாபாத்திரத்திற்காக சரண்யா மேடத்தை அணுகினேன்.

அவர் ஒரு பல்துறை நடிகை, அவர் திரைக்கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக இருப்பார்.. சரண்யாவின் மறுபக்கத்தை இதில் பார்க்கலாம் என்று நான் உணர்ந்தேன்,” என்கிறார் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன்.

---- Advertisement ----