இரண்டாவது மகளை மறைத்து வளர்க்கும் சரண்யா.. ஹீரோயின்களை மிஞ்சும் அழகு.. வியப்பில் ரசிகர்கள்..!

அன்றும், இன்றும் என்றும் உலக நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமலுக்கு ஜோடியாக நடித்த சரண்யா பொன்வண்ணன் நாயகன் படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை.அடுத்து தமிழில் பல ஹிட் படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தற்போது அம்மா கேரக்டர் ரோல்களை அசத்தக் கூடிய வகையில் செய்து அனைவரது மனதையும் கவர்ந்திருக்கிறார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன்..

சரண்யா பொன்வண்ணனை பொருத்த வரை தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததை அடுத்து தேசிய விருதைப் பெற்ற இவர் எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, களவாணி, முத்துக்கு முத்தாக, மகளிர் மட்டும், ஒரு கல் ஒரு கண்ணாடி, கொடி போன்ற படங்களில் அம்மாவாக நடித்திருக்கிறார்.

ஆடி போய் ஆவணி வந்தால் என் பையன் டாப்ல வருவான் என்ற வசனத்தை பேசி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்ட நடிகை சரண்யா 1995-ஆம் ஆண்டு தன்னோடு இணைந்து நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார்.

---- Advertisement ----

இதனை அடுத்து நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்த இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற அழகான இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

ஹீரோயின்களை நெஞ்சம் அழகில் மகள்..

இதில் இவரது மகள் பிரியதர்ஷினி சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியில் மருத்துவப் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு சில வருடங்களில் ஒரு மிகச்சிறந்த மருத்துவராக மாறக் கூடிய நிலையில் பிரியதர்ஷினி இருக்கிறார்.

அக்காவை போலவே இரண்டாவது பெண் சாந்தினி படிப்பில் படு சுட்டியாக திகழ்வதாக தெரிய வந்துள்ளது. தற்போது இவர் பிளஸ் டூ படித்து வருகிறார்.

இந்நிலையில் பிளஸ் டூ படிக்கும் இரண்டாவது மகள் சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார். அத்தோடு ஒரு நடிகை சரண்யா விருகம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் ஒரு பேஷன் டிசைனிங் ஸ்கூல் வைத்திருக்கிறார்.

வியப்பின் உச்சத்தில் ரசிகர்கள்..

இது வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை சரண்யா தனது பேஷன் டிசைனிங் ஸ்கூலில் பலருக்கும் பேஷன் டிசைனிங் மற்றும் ஸ்டிச்சிங் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்.

மேலும் இவர் யார் ஆசைப்பட்டாலும் தன் மகளை கண்டிப்பாக நடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும் தற்போது இணையத்தில் வெளி வந்திருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது அந்த இரு மகன்களும் ஹீரோயின்களை போல இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் வரும் காலம் தான் இந்த இரண்டு பெண்களும் திரை துறையில் ஹீரோயின்களாக ஜொலிப்பார்களா? அல்லது மருத்துவராகவும் சயின்டிஸ்ட் ஆகவும் ஜொலிப்பார்களா? என்பது தெரிய வரும் என சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த புகைப்படங்கள் இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பகிரப்பட்டு வருவதால் ரசிகர்கள் அனைவரும் இளம் ஹீரோயின்களே மிஞ்சும் அழகில் சரண்யாவின் மகள் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தும். அந்த அளவு சரண்யாவின்  இரண்டு மகள்களும் ஜொலிக்கிறார்கள் என்று சொல்லலாம்.

---- Advertisement ----