நிவேதா பெத்துராஜ்.. துபாய் வீடு.. கோடிகளில் செலவு.. அத்தனையும் உண்மை.. ஆதாரத்துடன் நிற்கும் பிரபலம்..!

மதுரையை சேர்ந்த தமிழ் பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ் பிறந்தது மதுரையாக இருந்தாலும் வளர்ந்தது துபாய் நாட்டில் தான்.

அந்நாட்டிலே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். அதன் பிறகு தனக்கு சினிமாவில் இருக்கும் ஆர்வத்தை வைத்து திரைத்துறையில் நுழைந்தார்.

இதையும் படியுங்கள்: முதன் முறையாக நீச்சல் உடையில்.. சொக்க வைக்கும் ஸ்ரீரஞ்சனி..! கன கச்சிதம்..!

முதன் முதலில் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

நிவேதா பெத்துராஜ்:

முதல் படமே அவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து அடுத்தடுத்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல், ஆலா வைகுந்தபுர்ரமுலூ,

உள்ளிட்ட தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.இவர் பொதுவாக எம்மனசு தங்கம் திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் ஹீரோவான உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக பழகியதாக கிசு கிசுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: பிட்டு பட நடிகைகள் கூட பிச்சை வாங்கணும் போல.. தூக்கலான கிளாமரில் துஷாரா விஜயன்..!

இந்த விஷயத்தை பூதாகரமாக கிளப்பியது பிரபல அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் தான். சவுக்கு சங்கர் சமீப நாட்களாக அரசியல் குறித்தும்,

அரசியலில் நடக்கும் தில்லுமுல்லு குறித்தும் அரசியல்வாதிகளின் உண்மை முகங்களையும் கிழித்தெறிந்து வருகிறார்.

youtube சேனல்களில் நடத்தப்படும் பல்வேறு பேட்டிகளில் அரசியல்வாதிகளின் முகத்தை தைரியமாக கிழித்து அவர்களை குறித்து விமர்சனம் செய்து வருகிறார்.

சவுக்கு ஷங்கர் விளாசல்:

சவுக்கு சங்கர் குறிப்பாக திமுகவை பற்றி அவர் பல விமர்சனங்களை முன்வைத்து அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறி அதிரவைத்து வருகிறார்.

ஆனால், இதுவரை இவர் மீது எந்த ஒரு ஆக்சனும் எடுக்காததற்கு என்ன காரணம் என பலருக்கும் பெரும் கேள்வியாக இருந்து வருகிறது.

இப்படி தேர்தல் சமயத்தில் சவுக்கு சங்கர் எடுத்திருக்கும் இந்த விஷயம்தான் நிவேதா மற்றும் உதயநிதி ஸ்டாலினின் விவகாரம்.

அதாவது உதயநிதி ஸ்டாலின் பொதுவாக எம்மனசு தங்கம் திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தில் ஹீரோயினாக நடித்த நிவேதா பெத்துராஜ் உடன் நெருக்கமாக பழகி அவரது அழகில் மயங்,

கிட்டதட்ட ரூபாய் 50 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்றை அவருக்கு வாங்கி பரிசளித்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறி அதிர வைத்தார்.

இந்த விஷயம் தமிழகம் முழுக்க பெரும் பூதாகரமாக வெடிக்க துவங்கியது குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமா வேறு அரசியல் வேறு என்று பிரித்து பார்க்கவே முடியாது அந்த அளவுக்கு

அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளுக்கு முக்கிய புள்ளிகளாக இருப்பது சினிமா நடிகைகள் தான் என தகவல்கள் கூறுகிறது.

நான் 16 வயதிலே… நிவேதா பதிலடி:

அப்படிதான் நடிகை நிவேதா பெத்துராஜ், சவுக்கு சங்கரின் இந்த பேட்டியை பார்த்து அது எதுவுமே உண்மை இல்லை. இது வெறும் வதந்தி செய்தி… நான் என்னுடைய 16 வயதிலிருந்து சுதந்திரமாக என்னுடைய சொந்த செலவில் தான் என்னை பார்த்துக் கொள்கிறேன்.

நான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து இருப்பதில்லை. நாங்கள் சிறுவயதிலிருந்து துபாயில் குடி பெயர்ந்து அங்கேயே வளர்பவர்கள்.

இதையும் படியுங்கள்: என் உடம்பில் செக்ஸியான வளைவு இது தாங்க.. நித்யா ராம் வெளியிட்ட நச் போஸ்..!

அதனால் எங்களுக்கு இந்த வீடு பங்களா இது எதுவுமே எங்களுக்கு அவசியம் இல்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஏனெனில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சவுக்கு சங்கரிடம் நிவேதா பெத்துராஜின் இந்த பேட்டி கொடுத்து கேள்வி எழுப்பியதற்கு,

சவுக்கு ஷங்கர் மீண்டும் அதிரடி:

நான் சொன்னது அத்தனையும் உண்மை. நிவேதா பெத்துராஜிக்கு உதயநிதி ஸ்டாலின் 50 கோடியில் வீடு வாங்கி கொடுத்து உண்மை.

இது அவருக்கும் தெரியும் இது பற்றி நிவேதா பெத்துராஜ் என் மீது கேஸ் கூட போடட்டும் நான் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என மீண்டும் தடாலடியாக இது உண்மைதான் என அடித்து கூறியுள்ளார்.

அவரின் இந்த கருத்து தற்போது மீண்டும் கவனத்தையும் ஈர்த்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.