நடிகை சீதா குறித்து பலருக்கும் தெரியாத ரகசிய பக்ககங்கள்..!

1980-களில் தமிழகத்தின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சீதா சென்னையில் இரண்டு வளர்ந்தவர் இவர் 1968 ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் நாள் பிறந்தார்.

இவருக்கு தந்தை திரு மோகன் பாபு தமிழ் சினிமாவில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது.

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக மாறிய நடிகை சீதா இயக்குனர் பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் நடித்தவர்.

நடிகை சீதா..

நடிப்பில் பிடிப்பு இல்லாமல் இருந்த சீதா டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் தந்தை மற்றும் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பாண்டியராஜன் அளித்த வாக்குறுதிக்கு இணங்கவும் அந்த படத்தில் நடித்தார்.

---- Advertisement ----

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திரை உலகில் நடிக்க ஆரம்பித்த இவரது முதல் காட்சியில் படுத்து கொண்டே காலை ஆட்டுவது போன்ற காட்சியை தான் பாண்டியராஜன் எடுத்தார்.

இதனை அடுத்து ஆண்பாவம் படத்தில் பல நிபந்தனைகளோடு நடித்த சீதா தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்த அந்த படம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

சீதாவின் முதல் படத்துக்கு சம்பளம் ஏதும் தராத தயாரிப்பாளர் படம் வெற்றி அடைய சீதாவிற்கு அம்பாசிடர் கார் ஒன்றை பரிசளித்தார். அடுத்து சீதாவுக்கு சினிமாவில் நடிப்பது பிடித்து போனதால் படிப்பை விட்டு விட்டு முழு நேர நடிகையாக மாறினார்.

தெரியாத ரகசிய பக்கங்கள்..

மிகச் சிறப்பான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்திய வந்த நடிகை சீதா குரு சீசன் படத்தில் கவர்ச்சியாக நடித்ததை பார்த்து இயக்குனர் பாலச்சந்தர் நீ மற்ற படங்களில் சிறப்பாக நடித்திருக்க ஏன் கவர்ச்சி காட்டி நடிக்க விரும்பினாய்.

உனக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு எனவே கவர்ச்சியாக நடித்து உன் மதிப்பை குறைத்துக் கொள்ளாதே என்று அறிவுரை கூறியதை அடுத்து குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார்.

கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் அந்த நேரங்களில் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காரணத்தால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இதனை அடுத்து புதிய பாதை படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் இல்லை என்று தன் அப்பாவிடம் சொல்ல அவரது அப்பாவோ சிறந்த கதையாக உள்ளது. எனவே நடித்தால் உனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறியதை அடுத்து அந்த படத்தில் நடித்தார்.

அந்தப் படத்தில் அவரோடு இணைந்து நடித்த போது அவரது திறமையை பார்த்து வியந்து போன சீதா அவரை காதலிக்கவும் ஆரம்பித்து கடைசியில் திருமணமும் செய்து கொண்டார்.

எனினும் சீதா பார்த்திபனை காதலித்தது அவரை திருமணம் செய்து கொண்டதோ அவர் குடும்பத்தாருக்கு பிடிக்காத காரணத்தால் அவர்கள் இவர்களது காதல் திருமணத்திற்கு உடன்படவில்லை.

அட இவ்வளவு இருக்கா?..

இதனை அடுத்து பெரிய போராட்டத்திற்கு பிறகு இவர்கள் திருமணம் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்தார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பலரது கண்ணும் படும்படி வாழ்ந்த இவர்களது மண வாழ்க்கை முடிவுக்கு வந்ததற்கு என்ன காரணம் என்று பலரும் பல்வேறு வகையான காரணங்களை சொல்லி வரக்கூடிய நிலையில் நடிகை சீதா பேட்டி ஒன்று சுகாசினி ஒரு படத்தில் பாடக்கூடிய என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என்ற மாதிரி என் கணவனிடம் இருந்து எனக்கு முழுமையான அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.

அது கிடைக்காததால் தான் நான் பிரிந்து விட்டேன் என்பதை கூறியிருக்கிறார். இதனை அடுத்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிரமப்பட்ட சீதா சினிமாவை தவிர வேறு ஏதும் தெரியாததால் மீண்டும் நடிக்க முடிவெடுத்தார்.

அந்த வகையில் சில சீரியல்களிலும் சில படங்களிலும் குணசத்திர வேடங்களில் நடித்திருக்க கூடிய இவரது கதையைக் கேட்ட ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உறைந்து விட்டார்கள்.

---- Advertisement ----