Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

படுக்கைக்கு சம்மதிக்கலன்னு.. அந்த இடத்தில் அடித்தார்கள்.. எரிச்சல் தாங்காமல் கத்தினேன்..

Tamil Cinema News

படுக்கைக்கு சம்மதிக்கலன்னு.. அந்த இடத்தில் அடித்தார்கள்.. எரிச்சல் தாங்காமல் கத்தினேன்..

இன்று சினிமா உலகில் மட்டுமல்லாமல் சின்னத்திரை உலகிலும் அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து வருவதை அடுத்து நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் அது பற்றிய விஷயங்கள் இணையங்களில் வெளி வந்து கடுமையான அதிர்வடைகளை ஏற்படுத்துகிறது.

மேலும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து தற்போது நடிகைகளின் வெளிப்படையாக பேசி வரக்கூடிய கால கட்டத்தில் இதனை எப்படி தடை செய்வது என்ற ரீதியில் சிந்தித்து வருகிறார்கள்.

சீரியல் நடிகை தாரணி..

மேலும் மிகப் பிரபலமாக இருக்கும் நடிகைகள் இருந்து துணை நடிகைகள் வரை இந்த அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை நடந்து வருகிறது. இது பற்றி அண்மை பேட்டி ஒன்றில் சீரியல் நடிகை தாரணி கூறிய விஷயங்கள் பெருத்த ஷாக்கை தந்துள்ளது.


இவர் தனது 15 வது வயதில் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து வரக்கூடிய நடிகையாக திகழ்கிறார். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தங்கையாக எதிரும் புதிரும் படத்தை நடித்தவர்.

அது மட்டுமல்லாமல் 1988 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த உன்னால் முடியும் தம்பி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருக்கிறார். இதனை எடுத்து பாலைவனப் பறவைகள், சின்ன வாத்தியார், கிழக்கு வீதி, வைகறை பூக்கள், பெரிய மருது போன்ற படங்களில் துணை நடிகையாக வலம் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

--Advertisement--

இவர் சன் டிவியில் தாலாட்டு சீரியல் சிவகாமி என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்க கூடிய இவர் தான் இரண்டு படங்களில் நடித்த பிறகு தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட நபர்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது இதை போட்டுக்க சொன்னாங்க.. மனிஷா கொய்ராலா ஓப்பன் டாக்..

அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுனா மீண்டும் வாய்ப்பு..

இவர் முதலில் பட வாய்ப்புகளை பெறுவதற்காக இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் ஈடுபட்டது இல்லை என்றும் இதை எடுத்து ஒரு வாய்ப்பில் நடித்து வரும் போது அந்த படத்தின் கேமராமேன் மற்றும் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் என சில நபர்கள் இவரிடம் அட்ஜஸ்ட்மெண்டை செய்ய சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள்.


அதிலும் குறிப்பாக அந்த படத்தின் கேமராமேன் தன்னை வற்புறுத்தி அட்வெஸ்மென்ட் செய்ய கூறியதை அடுத்து நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்னை பற்றி இந்த செயல் கேட்டு பாருங்கள். அப்படி ஏதாவது சொன்னால் உடன்படிகிறேன் என்றேன்.

இந்த பதிலை சற்றும் எதிர்பாராத அவர் வேறு எதையும் கூறாமல் அப்படியே விட்டு விட்டார். அதுமட்டுமல்லாமல் அவரை அட்ஜஸ்ட் செய்தால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தருவதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: கதவை சாத்திக்கிட்டு ரூம் உள்ளே இதை பண்ணுவா.. வீட்ல எல்லாருக்குமே தெரியும்.. வனிதா கூறிய பகீர் தகவல்…

ஆனால் நான் அந்த ஆசைக்கு இணங்க மறுத்ததை அடுத்து அவர் ஷூட்டிங் சமயத்தில் அதிக வோல்டேஜ் இருக்கக்கூடிய லைட்யை என் முகத்தின் பக்கம் திருப்பி விட அந்த விளக்கின் ஒளி பட்டவுடன் எனது முகத்தில் எரிச்சல் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளானேன்.


இந்நிலையில் அவரை அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் தான் அந்த வஞ்சகத்தை இப்படி தீர்த்து கொண்டாரோ என்று கூட சில நேரங்களில் நான் நினைத்தது உண்டு என்று பரபரப்பாக தனது பேட்டியில் கூறினார்.

மேலும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு சம்மதிக்கவில்லை என்பதால் தான் முகத்தில் அந்த விளக்கை வைத்து அடித்தார்கள். இதனால் எரிச்சல் தாங்காமல் நான் கத்தி விட்டேன் என்று கூறிய விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top