அதெல்லாம் வேணாம்.. ஆனால்.. என் அம்மாவிடம் அதை கேட்டான்.. புது குண்டை தூக்கி போட்ட நடிகை சம்யுக்தா..!

திரைப்படத்துறையில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமைகள் பற்றி பல நடிகைகள் பொதுவெளியில் வந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.

சம்மந்தப்பட்ட நபர் யார் என்றும் கூறி அவர்களையும் அசிங்கப்படுத்தி இருக்கிறார். அப்படி பல்வேறு நடிகைகள் அடுக்கடுக்கான மீடூ புகார் கூறி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

அப்படித்தான் பிரபல சீரியல் நடிகையான சம்யுக்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருக்கிறார்.

சீரியல் நடிகை சம்யுக்தா:

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து வந்தார்.

இவர் அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

---- Advertisement ----

ஆனால் இந்த திருமணம் நடந்த கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து கேட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

அது மட்டும் இல்லாமல் இருவருக்குள்ளும் நடந்த கருத்து வேறுபாடு பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை பொதுவெளியில் வந்து கூறி முகம் சுளிக்க வைத்தனர்.

குறிப்பாக தங்களது அந்தரங்க விஷயங்களை கூட அசிங்கம் இன்றி கூறி பேசியதால் அனைவரது விமர்சனத்திற்கும் ஆளானர்.

கல்யாணம் ஆகி ஒரு மாதத்திலே விவாகரத்து:

சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் ஜோடியின் இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

வேறொரு சீரியல் நடிகருடன் தகாத உறவு வைத்திருந்ததால் தான் சம்யுக்தா தன்னுடைய கணவரான விஷ்ணுகாந்தை விவாகரத்து செய்ய முன் வந்ததாகவும் செய்திகள் வெளியாகி தீயாய் பரவியது.

இவர்களின் இந்த விவகாரம் சீரியல் வட்டாரத்தில் பெரும் பூதாகரமாக கிளம்பியது. அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அடுக்கடுக்கான புகார்களை கூறிக் கொண்டனர்.

குறிப்பாக சம்யுக்தா விஷ்ணுகாந்த் திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் மிகவும் கொடுமைப்படுத்தியதாக உடல் ரீதியாகவும், உறவு ரீதியாகவும் மிகவும் டார்ச்சர் செய்ததாக கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ள சம்யுக்தா அடுத்ததாக தொடர்ந்து சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படியான நேரத்தில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற சம்யுக்தா உங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை நடந்து இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அதாவது நான் சீரியலில் நடிக்கும் போது என்னிடம் யாரும் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டோ அதற்காக முன்வந்து யாரும் என்னிடம் பேசவே இல்லை.

3 முறை அட்ஜெஸ்ட்மென்ட்:

ஆனால் எனக்கு மூன்று முறை பட வாய்ப்பு கிடைத்தது. அந்த மூன்று பட வாய்ப்புகளுமே அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள கேட்டார்கள்.

பொதுவாக நான் காஸ்டிங் இயக்குனர்களிடம் என்னுடைய நம்பரும் என்னுடைய அம்மாவின் நம்பரும் சேர்த்து தான் கொடுப்பேன்.

அப்போது எனக்கு போன் செய்துவிட்டு உடனே என் அம்மாவுக்கு போன் செய்து உங்கள் மகளுக்கு பட வாய்ப்பு தருகிறேன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து கொள்வார்களா என கேட்டார்கள்.

அது என் அம்மாவுக்கு முதலில் புரியவில்லை. ஆடிஷன் எங்கே? நாங்க எங்கே வரணும்? என விசாரித்த போது ஆடிஷன் எல்லாம் இல்லை.

அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் அடுத்த நாளே சூட்டிங் போகலாம் என கூறினார்கள். பின்னர் என் அம்மா இதை புரிந்து கொண்டு முடியாது என நிராகரித்தார் என்று சம்யுக்தா கூறியுள்ளார்.

---- Advertisement ----