ஒரு படத்துல நடிக்கணும்.. வா..ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்.. – நடிகை ஷகிலா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

பிரபல நடிகை ஷகிலா ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் படங்களை விடவும் அதிக வசூல் குவித்த படங்களில் நடித்தவர். நடிகை ஷகிலா குறித்து பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை.

சமீபத்தில் இவருடைய சுயசரிதை புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த சுயசரிதையை படமாக்க ஏகப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டன. அந்த வகையில் ஹிந்தியில் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்துள்ளனர்.

ஆனால், நடிகை ஷகிலாவின் சுயசரிதையில் இடம்பெற்றிருந்த ஒரு முக்கியமான விஷயம் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியது என்றுதான் கூறவேண்டும். நடிகை ஷகிலா படங்களில் நடிப்பதில் கவனமாக இருந்தாலும் பண விஷயத்தில் கொஞ்சம் கறாராக இல்லாமல் போய்விட்டார் என்பது இதன் மூலம் தெரிகின்றது.

அன்றாட தேவைக்கு, வீட்டின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கு பணம் இருந்தால் போதும் என்று பண விஷயத்தில் உஷாராக இல்லாமல் போய்விட்டார் ஷகிலா. அதனை உணர்ந்து கொண்ட பிறகு அது குறித்து தன்னுடைய வேதனையை பதிவு செய்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் பல லட்சங்களை தயாரிப்பாளர்களுக்கு பெற்று கொடுத்தது. ஆனால் எனக்கு அந்த அளவுக்கு சம்பளம் கொடுத்தார்களா என்றால்..? இல்லை.

---- Advertisement ----

இப்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் எல்லாம் தங்களுடைய படம் 100 கோடி வசூலித்து விட்டால் அதில் கிட்டத்தட்ட பாதி தொகையை சம்பளமாக பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் 10 லட்சம் என்னுடைய பணம் வசூலித்தால் வெறும் 40 ஆயிரம் 50 ஆயிரம் என்றுதான் நான் சம்பளத்தை பெற்றேன்.

சம்பள விஷயத்தில் கறாராக இல்லாததுதான் என்னுடைய பொருளாதார நிலைமை முன்னேறாமல் இருந்ததற்கு காரணம் என்று உணர்கிறேன். இது மட்டும் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கால்சீட் கேட்பார்கள்.

நானும் நடித்துக் கொடுப்பேன். படப்பிடிப்புக்கும் கூட்டிக்கொண்டு போவார்கள். ஆனால் நான் நடித்த ஒரு படத்தை வைத்து நான்கு படங்களை தயாரித்து இருப்பார்கள் தயாரிப்பாளர்கள்.

ஒரே படத்தில் நான்கு படத்தின் கதையை அடக்கி படப்பிடிப்பு நடத்திவிட்டு அதனை தனித்தனி படமாக வேறு வேறு தலைப்புகளில் வெளியிடுவார்கள். ஆனால் எனக்கு சம்பளம் ஒரே ஒரு படத்திற்கு மட்டும்தான் கிடைக்கும்.

இது குறித்து அப்போது எனக்கு சரியான விழிப்புணர்வு கிடையாது. பண விஷயத்தில் நான் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் என்னுடைய பொருளாதார நிலைமை நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கின்றார் நடிகை ஷகிலா.

---- Advertisement ----