“என்னோட அழுக்கு ஜட்டி-ய எடுத்து.. அவ என்னை… ” – ஷீத்தல் பிரிவு குறித்து பப்லூ மோசமான பேச்சு..!

கடந்த 1971 ஆம் ஆண்டு தன்னுடைய ஆறாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் முன்னணி நடிகராக வளர்ந்தவர் தான் பப்லு பிரித்திவிராஜ்.

இவர் பெங்களூரில் பிறந்தவர். 57 வயதை கடந்து விட்ட போதிலும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார்.

தன்னுடைய உடல் அமைப்பால் அதிக ரசிகர்களையும் குறிப்பாக பெண் ரசிகைகளையும் கவர்ந்தவர்.

90ஸ் கிட்ஸ்களுக்கு இவர் தொகுத்து வழங்கிய சவால் என்ற நிகழ்ச்சி என்றுமே மறக்காத ஒரு நிகழ்ச்சி. இது ஒரு பக்கம் இருக்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் திடீரென செய்திகளில் இடம் பிடிக்க ஆரம்பித்தார்.

என்ன காரணம் என்றால் பெரும் 27 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் பப்லு என்ற தகவல் வெளியானது தான்.

---- Advertisement ----

பப்லுவிற்கு 23 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில் 27 வயதில் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொள்ள இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை ஒரு விதமான நெருடலில் ஆழ்த்தியது.

பப்லுவின் இரண்டாவது மனைவி என் பெயர் ருக்மணி ஷீத்தல். இவர் மலேசியாவை சேர்ந்தவர். ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு சென்றிருந்த பொழுது ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியுள்ளனர்.

அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பலரும் இவருடைய திருமணம் பற்றிய எதிர்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்திய நேரத்தில் அதை அவர்கள் கண்டு கொள்ளாமல் திருமண வாழ்க்கை ஐக்கிக்கமானார்கள்.

சீத்தல் தனக்கு நல்ல மனைவியாக இருக்கிறார் என்றும் தன்னுடைய முதல் மனைவியை ஏற்படுத்திச் சென்ற காயங்களை ஒரு ஆற்றுகிறார் என்றும் பப்லு கூறி இருந்தார்.

மட்டுமில்லாமல் இந்த வயதிலும் எனக்கு பாடி டிமாண்ட் இருக்கிறது. அது எப்படி இல்லாமல் இருக்கும். அதனை போக்குவதற்கு ஒரு பெண் தேவைதானே.. அதனால்தான் சீத்தலை திருமணம் செய்து கொண்டேன் என்றெல்லாம் பேசியிருந்தார்.

இந்நிலையில், இருவரும் தற்போது பிரிந்து இருக்கின்றனர் என்ற தகவல் கடந்த ஒரு வாரமாக இணைய பக்கங்களில் வியாபித்து இருக்கிறது. இந்நிலையில், பப்லு பிரித்திவிராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் அவர் கூறியதாவது, நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று நான் எங்கேயாவது கூறினேனா..? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா..? நீங்களாக நாங்கள் பிரிந்து விட்டோம் என்கிறீர்கள்.. நீங்களாக நாங்கள் சேர்ந்து விட்டோம் என்கிறீர்கள். என பதில் அளித்தார்.

மேலும், ஷீத்தல் குறித்து அனைத்து கேள்விகளுக்கும் ஒரு விதமான விரக்தியான மனநிலையிலேயே பதில் அளித்தார் என்பதை உணர முடிகிறது. இதன் மூலம் இருவரும் பிரிந்து தான் இருக்கின்றனர் என்பதை உறுதியாக கணிக்க முடிகிறது.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் நான் ஒரு நடிகன் என்னுடைய அழகாலும் என்னுடைய நடிப்பாலும் ரசிகர்களை கவர்வது தான் என்னுடைய வேலை. என்னுடைய அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் துவைக்க நான் விரும்பவில்லை.

நான் அழுக்கு ஜட்டி என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட மோசமான விஷயங்களை பற்றி எனவே அதனை பொதுவெளியில் பேச வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது நான் என்ன செய்தாலும் அதனை விமர்சிக்க பத்து பேர் இருப்பார்கள் அதனை வாழ்த்துவதற்கு பத்து பேர் இருப்பார்கள் எனவே என்னுடைய பொது தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் வைக்க நான் முயற்சி செய்ய மாட்டேன் என கூறியிருக்கிறார் பப்லு பிரிதிவிராஜ்.

ஷீத்தல் விவகாரத்தை தான் அழுக்கு ஜட்டி-யோடு ஒப்பிட்டு பேசியுள்ளார் பப்லூ. இவருடைய பேச்சில் தெளிவு இல்லை. ஆணவம் தான் வெளிப்படுகிறது என்றும் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

---- Advertisement ----