ஸ்ரேயா கோஷல் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க… அப்படியே ஏங்கி போயிடுவீங்க…

ஸ்ரேயா கோஷல் (shreya ghoshal) மிகச்சிறந்த ஒரு பின்னணி பாடகி. இந்த பாடல்களை பட்டியலிட்டாலே, அட, இந்த பாடல்கள் எல்லாம், இவர் பாடியதா என்ற ஆச்சரியம்தான் உங்களுக்கு தோன்றும், அந்தளவுக்கு, மிக பிரபலமான பாடல்களை இவர் பாடி இருக்கிறார். இவர் பாடியதால்தான் இந்தளவுக்கு இந்த பாடல்கள், இனிமையாக இருக்கிறதா என்றால், அதுவும் மிகப்பெரிய உண்மைதான்.

#image_title

இளம் காற்று வீசுதே – பிதாமகன்,
குண்டு மல்லி குண்டு மல்லி –சொல்ல மறந்த கதை,
தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு – சண்டக்கோழி,
உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமி்ல்ல– விருமாண்டி,
நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்– 7 ஜி ரெயின்போ காலனி,
பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு – வசூல்ராஜா எம்பிபிஎஸ்,
அண்டங்காக்கா கொண்டைககாரி –அந்நியன்
சாமிகிட்ட சொல்லிபுட்டேன் – தாஸ்
மைலாஞ்சி, மைலாஞ்சி – நம்ம வீட்டுப்பிள்ளை
சாரக்காற்றே – அண்ணாத்த
ராட்சச மாமனே – பொன்னியின் செல்வன்

#image_title

இன்னும் நிறைய நிறைய பாடல்களை இப்படி பட்டியலிட்டு சொல்லிக்கொண்டே போகலாம், இந்திய மொழிகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி,.கன்னடம், உருது என, 19 மொழிகளில் பாடக்கூடிய மிகச்சிறந்த பாடகி. இதுவரை, 2,300 பாடல்களை பாடி இருக்கிறார். இதில், இந்தியில் மட்டுமே 900 பாடல்களை பாடி இருக்கிறார்.

சிறந்த பாடகிக்காக, நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.. பின்னணி பாடகி மட்டுமல்லாது, பாடல் ஆசிரியராகவும் உள்ளார். பாடல்களுக்கு இசை அமைத்தும் இருக்கிறார். நான்குமுறை கேரள அரசு விருது, இரண்டு முறை தமிழக அரசின் விருது, மற்றும் பலமுறை பிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கிறார்.

#image_title

இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஸ்ரேயா கோஷல் அவ்வப்போது, தனது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்களை பார்த்தால், சினிமா நடிகையை விட மிக அழகாக இருக்கிறார். இவர் பாடகியாக மட்டுமின்றி, நடிகையாகவும் தன் திறமையை வெளிப்படுத்தி இருந்தால், தமிழிலோ அல்லது மற்ற மொழி ஏதேனும் ஒன்றிலோ மிக முக்கியமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்திருப்பார் என, பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், இவர் நடிப்புத்துறைக்கு வந்திருந்தால், மிகச்சிறந்த பாடகி ஒருவரை இந்திய சினிமாவில், இசைத்துறை இழந்திருக்கும் என்பதும் உண்மைதான். பாடகியாக அவர் நீடித்து வருவதால், தேன் சொட்டும் இத்தகைய சிறந்த பாடல்களை, அவரால் நமக்கு தர முடிந்திருக்கிறது. அந்த வகையில், இசை ரசிகர்கள் அனைவருமே, அதிர்ஷ்டசாலிகள்தான்.

#image_title

எனினும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ரேயா கோஷல் தொடர்ந்து, தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மனம் குளிர செய்து விடுகிறார். செவிக்கு மட்டுமின்றி, மனதுக்கும் இனிமை சேர்க்கும் அவரது சேவையை, ரசிகர்கள் மனதார பாராட்டி வாழ்த்துகின்றனர்.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.