பெற்றவர்களுக்கு சிம்பு என்ன வேண்டுகோள் விடுத்தார்? கல்யாணம் பண்ணுங்க என அட்வைஸ் நோ … வேண்டாம்….

அடுக்கு மொழியில் பேசும் டி ராஜேந்திரனின் மகன் தான்  சிலம்பரசன் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற திரையுலகிலும் நம்பர் ஒன் ஹீரோயின் ஆக திகழ்ந்து வருகிறார். இவரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீட்டிலும்  தன் பிள்ளையாகவே நினைக்கக்கூடிய பெற்றோர்கள் உள்ளனர். இவர் அந்த அளவுக்கு நடிப்பில் மக்களை கவர்தவர். ஏராளமான திறமை  இவனிடம் உள்ளது. எனினும் அதிர்ஷ்டம் கை கொடுக்காத காரணத்தினால் இவருக்கு இடையில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டு விட்டது.

சிலம்பரசன் என்று இவரை அழைப்பதை விட சிம்பு என்று அன்பாக அனைவரும் அழைப்பார்கள். இவரது சமீபத்திய படமான “வெந்து தணிந்தது காடு” பட இசைவெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்ட முறையில்  நடந்தது. இந்த விழாவிற்கு உலக நாயகன் வருகை தந்திருந்தார்.

 அப்போது அவர் மேடையில் பேசியது அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் மிக ஆழமாக கைதட்டி அவரது பேச்சை வரவேற்றார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் இவர் அந்த மேடையில் தன்னுடைய பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

 

எத்தகைய வேண்டுகோள் என்றால் அடிக்கடி வயதுக்கு வந்த ஆண்களை உடனடியாக நீ திருமணம் செய்து கொள் என்று அட்வைஸ் பண்ணுவதும் அல்லது டார்ச்சர் பண்ண வேண்டாம். எது எப்போது நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும். அது கண்டிப்பாக அப்போது நடக்கும் என்று சூசகமாக தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்கும் பெற்றோர்களுக்கு அவர் ஒரு சின்ன அறிவுரை தந்து தான் அந்த கைதட்டலுக்கு காரணமாக இருந்தது.

---- Advertisement ----

இதற்கிடையில் மீண்டும் அவர் பேசும்போது கமலஹாசனை நோக்கி நிச்சயமாக உங்களுடைய ரீமேக் படத்தில் அல்லது ரீமிக்ஸ் படத்திலோ எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டுமென்றார். இதைத் தொடர்ந்து கமலஹாசன் நாம் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கலாம். நீங்கள் ரீமேக் படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறும் போது அரங்கமே அதிர்ந்தது.

பெற்றோர்கள் அதிகமாக தங்கள் பிள்ளைகளை திருமணம் செய்யத் தூண்ட வேண்டாம் என்று  கூறியது ஒரு மிகப்பெரிய ஹைலைட்டாகி, வைரலாகி இன்று பரவி வருகிறது.

---- Advertisement ----