“You Go மேன்.. Why மீ..?…” – ஸ்கெட்ச் போட்ட நெல்சன்..! – தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எத்தனை வயதானாலும் இவரோடு இணைந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா இளம் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், இளம் நடிகைகளுக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பு கிடைத்தும் கூட அது தனக்குத் தேவையில்லை என்று உதறித் தள்ளிய ஒரு நடிகர் தமிழ் திரை உலகில் உண்டு என்றாலா அவர் வேறு யாரும் இல்லை.சிவகார்த்திகேயன் தான்.

விஜய் டிவியின் வழியாக சின்னத்திரை மூலம் மக்களின் மனம் கவர்ந்த நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன் தான். ஆரம்ப காலத்தில் மிகவும் மிகவும் கஷ்டப்பட்டு படிப்படியாக வளர்ந்து என்று ஒரு உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று இருப்பவர் தான் சிவகார்த்திகேயன்.

இவர் படங்களில்  ரஜினி ரசிகராக தன்னை சித்தரித்துக் காட்டி இருந்தாலும் ஆரம்ப நாட்களில் ரஜினியை போல் அச்சு அசலாக பேசி மிமிக்ரி செய்தும் அசத்தியிருக்கிறார்.

ரஜினியை வைத்து தற்போது ஜெயிலர் படத்தை இயக்கும் இயக்குனர் நெல்சன் நடிகர் சிவகார்த்திகேயனை இந்த படத்தில் வில்லனாக நடிக்க கேட்டிருக்கிறார். ரஜினியுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த போதும் இவர் அதை மறுத்துவிட்டார் சிவகார்த்திகேயன். மேலும் இவர் தன்னால் நடிக்க முடியாது என்று ஓப்பனாக கூறிவிட்டார்.

இந்த இயக்குனருக்கும்  சிவகார்த்திகேயனுக்கும் ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாக நட்பு இருந்துள்ளது. இவரும்  விஜய் டிவியில் உதவி இயக்குனராக இருந்தவர்.

---- Advertisement ----

சிவகார்த்திகேயன் தனக்கு இத்தகைய கேரக்டரை மட்டும் செய்ய வேண்டும் என்ற கொள்கை பிடிப்புடன் இருந்து வருபவர். இவர் கூறிய வில்லன் மற்றும் நெகட்டிவ் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க மனம் இல்லாததால் தான் நடிப்பதற்கான வாய்ப்பை வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

எனக்கு என்று போடப்பட்டிருக்கும் வழிகள் தான் பயணிக்க வேண்டும் என்பதில் மிக உறுதியோடு சிவகார்த்திகேயன் இருப்பது வியப்பான ஒன்றுதான். எனினும் அவர் கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவர் வில்லன் போன்ற கதாபாத்திரங்களை ஏற்று முன்பு நடித்த நடிகர்கள் அவர்களது வாழ்க்கையில் சறுக்கி இருந்த இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள்.

அது போன்ற ஒரு நிலை வர வேண்டாம் என்று கூறி எண்ணி இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் பாராட்டுக்கு உரியது.

---- Advertisement ----