சேலை கட்டிய சோலைக்குயிலாக சோபிதா துலிபாலா

பொன்னியின் செல்வன் படம் மூலம் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா.(Sobhita Dhulipala) முதல் படத்திலேயே, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, குந்தவை த்ரிஷாவின் தோழியாக, வானதி கேரக்டரில் நடித்திருந்தார்.மணிரத்னம் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு, சிறு கேரக்டர் என்றாலும், படத்தில் ஒரு முக்கியத்துவம், அவர்களது நடிப்பில் தனித்துவம் தெரியும்.

அது, மற்றவர்களால் நிச்சயமாக கவனிக்கப்படும். அந்த வகையில், துலிபாலா இப்போது, ரசிகர்களால் கவனிக்கப்பட்டவராக மாறி இருக்கிறார். வரும் 28 ம் தேதி, பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தில் இவருக்கான காட்சிகள் அதிகமாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், முதல் படத்தில் வானதி, சில காட்சிகளில் மட்டுமே காணப்பட்டார்.

Sobhita Dhulipala

தமிழ் படங்களுக்கு தான் சோபிதா துலிபாலா அறிமுகமே தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 ல் பெமினா மிஸ் இந்தியா போட்டியில், பெமினா மிஸ் இந்தியா எர்த் 2013 பட்டம் வென்றவர். மாடலிங் துறையில் இருந்தவர். பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனங்களில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sobhita Dhulipala

தமிழில் இவர் அறிமுகமான பொன்னியின் செல்வன் படத்தில், முதல் பாகத்தில் சில காட்சிகளே வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்திருக்கிறது.பொன்னியின் செல்வன் படம் இரண்டாம் பாகத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் இளம்சிவப்பு ஜார்ஜெட் புடவையில் வந்த சோபிதா துலிபாலா, மற்றவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தார்.பொ்ன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து, தமிழில் பல பட வாய்ப்புகள் துலிபாலாவை தேடி வர வாய்ப்புள்ளது.

Sobhita Dhulipala

அதே வேளையில், சோபிதா துலிபாலாவும் சமூக வலைதள பக்கங்களில் ஆர்வமாக இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி தனது அழகிய, கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உஷ்ணம் ஏற்றி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் லேசான சந்தன கலரில், பூப்போட்ட புடவையில், இவரது ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அசந்து போய் உள்ளனர்.

---- Advertisement ----

Sobhita Dhulipala

தமிழ் சினிமாவை பொருத்த வரை, நல்ல நடிகையாக சில படங்களில் தனது திறமையை காட்டிவிட்டால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் துவங்கி விடும், அதுவும், தமிழ்நாட்டு பெண்ணாக இல்லாமல் அந்த நடிகை கேரளா, கர்நாடகா, ஆந்திரா அல்லது மும்பை வரவாக இருந்துவிட்டால், இன்னும் இமேஜ் அதிகரித்துவிடும்.

ஏனெனில், தமிழ்நாட்டு நடிகைகளை விட பிறமாநில நடிகைகள் கவர்ச்சியில் அதிக தாராளம் காட்டுகின்றனர். முகம் சுளிக்காமல் எந்த மாதிரியான கிளாமர் காட்சி என்றாலும், நடிக்க தயாராகி விடுகின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் தங்களுக்கு என ரசிகர்கள் மத்தியில் ஒரு நிலையான இடம் கிடைத்துவிட்டால், பிறகு கவர்ச்சி, நடிப்பு, கால்ஷீட், சம்பளம் என்பது,

Sobhita Dhulipala

அந்த நடிகையின் இறுதி முடிவாக மட்டுமே இருக்கும். அந்த வகையில், இப்போது சோபிதா துலிபாலா போன்ற நடிகைகள், கவர்ச்சியில் தாராளம் காட்டவும், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறவும் முயற்சிக்கின்றனர். அதற்கான ஒரு வாய்ப்பாக, சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால், அடிக்கடி தனது கிளாமர் படங்களை பதிவேற்றம் செய்து, ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் சோபிதா துலிபாலா.

---- Advertisement ----