சோபிதா துலிபாலா, (Sobhita Dhulipala) பொன்னியின் செல்வன் படம் மூலம் ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர். தமிழ் சினிமாவை பொருத்த வரை, நடிக்கிற படங்களின் எண்ணிக்கையை காட்டிலும், சிறந்த இயக்குநர் இயக்கும் படத்தில், சில காட்சிகள் வந்து செல்லும் சின்ன கேரக்டராக இருந்தாலும், ரசிகர்களின் மனதில் எளிதில் நிரந்தர இடம் கிடைத்து விடுகிறது. அந்த வகையில், சோபிதா துலிபாலாவுக்கு சிறந்த அதிர்ஷ்டமாக, தமிழ் சினிமாவில் முக்கிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
Sobhita Dhulipalaஇயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1ல், குந்தவை த்ரிஷாவின் தோழியாக, வானதி கேரக்டரில் இவர் நடித்திருந்தார். வரும் 28 ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள பொன்னியி்ன் செல்வன் 2ம் பாகத்திலும் இவர் நடித்திருக்கிறார். சில காட்சிகளே முதல் பாகத்தில் வந்து சென்றாலும், திரிஷாவின் தோழியாக, நடித்ததால், எளிதில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
Sobhita Dhulipalaதமிழ் படங்களுக்கு தான் சோபிதா துலிபாலா அறிமுகமே தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 ல் பெமினா மிஸ் இந்தியா போட்டியில், பெமினா மிஸ் இந்தியா எர்த் 2013 பட்டம் வென்றவர். மாடலிங் துறையில் இருந்தவர். பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனங்களில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இவர் அறிமுகமான பொன்னியின் செல்வன் படத்தில், முதல் பாகத்தில் சில காட்சிகளே வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்திருக்கிறது.ஏனெனில், இந்த படம், நட்சத்திர கூட்டம் நிறைந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்யாராய், த்ரிஷா என, எல்லா நடிகர். நடிகைகளுமே, மிக பிரபலமான நட்சத்திரங்கள். தமிழ் சினிமாவில் இத்தனை நடிகர்களும் ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.
Sobhita Dhulipalaபொன்னியின் செல்வன் படம் இரண்டாம் பாகத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் வெளிர்நிற இளம்சிவப்பு ஜார்ஜெட் புடவையில் வந்த சோபிதா துலிபாலா, மற்றவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தார்.பொ்ன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து, தமிழில் பல பட வாய்ப்புகள் துலிபாலாவை தேடி வர வாய்ப்புள்ளது.
--Advertisement--
அதே வேளையில், சோபிதா துலிபாலாவும் சமூக வலைதள பக்கங்களில் ஆர்வமாக இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி தனது அழகிய, கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உஷ்ணம் ஏற்றி வருகிறார்.
அந்த வகையில் இப்போது வெண்மை நிற ஸீ த்ரூ சேலையில் அம்மணி மிக அசத்தலான தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை உசுப்பேற்றி இருக்கிறார், இப்படி ஒரு அழகா என, ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு, தனது உடல் பாகங்களை மறைத்தும், மறைக்காமலும் காட்டி, இலைமறை காயாக ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சோபிதா.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.