Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இளம் நடிகையுடன் டேட்டிங்.. வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகை சமந்தாவின் மாஜி கணவருமான நாக சைதன்யா இளம் நடிகைகளுடன் டேட்டிங் சென்று வரும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இது தொடர்ந்து இவருடைய டேட்டிங் குறித்த தகவல்களும் அக்கட தேசத்து ஊடகங்களில் தியாக பரவி வருகின்றது. நடிகை சமந்தாவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்திருந்தார் நடிகர் நாக சைதன்யா.

இந்த படத்தில் இவர்களுக்கு நிஜமாகவே காதல் மறந்தது தொடர்ந்து சில ஆண்டுகள் காது வைத்து வந்த இவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் ஐக்கியமானார்கள்.

திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.

மட்டுமில்லாமல் நடிகை சமந்தா சமீபத்தில் நடித்த ஒரு பேட்டியில் நாகசைதன்யாவுடன் நான் அனுபவித்தது மனரீதியான மற்றும் உடல் நீதியான அழுத்தங்களை மட்டும் தான். மற்றபடி எதுவும் கிடையாது என்று பேசினார்.

--Advertisement--

மட்டுமில்லாமல் ஒருவேளை நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அந்த இடத்தில் இருக்க கூடிய கூர்மையான பொருட்களை ஒழித்து வைத்து விடுவது தான் சிறப்பாக இருக்கும். அவ்வளவு கோபத்தில் இருக்கிறேன் என்று பதிவு செய்திருந்தார் நடிகை சமந்தா.

மறுபக்கம் மையோசைட்டிஸ் என்ற விசித்திரமான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சமந்தா அதிலிருந்து மீள்வதற்கு முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வந்து இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட முன்னாள் கணவர் நாக சைதன்யா இளம் நடிகைகளுடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் கசிந்திருக்கின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்களே.? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் 25 வயதான சோபிதா துலிபாலா என்ற நடிகையை நடிகர் நாக சைதன்யா காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதற்கு முன்பே பல்வேறு இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சென்று வருவதும் டேட்டிங் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள் என்றும் அக்கட தேசத்தை ஊடகங்கள் எழுதி வருகிறார்கள்.

இப்படி தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகையாக வாழ்ந்த கொண்டிருந்த நடிகை சமந்தாவின் வாழ்க்கையை வீணடித்து விட்டு தற்போது அடுத்த நடிகைகளின் வாழ்க்கையை வீணடிக்க சென்று விட்டீர்களா..? என்று நாகசைதன்யாவை விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.

ஆனால், மறுபக்கம் அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை அதில் நாம் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை அவர்கள் யாருடன் இருக்க வேண்டும் யாருடன் இருக்கக்கூடாது என்று முடிவெடுப்பதற்கு அவர்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

இதில் யார் மீதும் தவறு கண்டுபிடித்து யாரையும் சாட வேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது என பொதுவான பார்வையையும் பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top