சிக்கலில் 5 முன்னணி நடிகர்கள்.. இரவு பார்ட்டியில் அரங்கேறிய கொடுமை.. நடிகை சோனா புது மூவ்..!

2011-ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தின் வெற்றி அடுத்து வெங்கட் பிரபு, வைபவ், எஸ்பிபி சரண், நடிகை சோனா உள்ளிட்ட 30 நபர்கள் இணைந்து இரவு நேரம் பார்ட்டியை சென்னை தி.நகரில் கொண்டாடி இருக்கிறார்கள்.


பொதுவாகவே திரைத்துறையில் இருப்பவர்கள் இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் அந்தப் பார்ட்டில் திரை மறைவில் பல்வேறு விதமான விஷயங்கள் நடந்து வருவதும் வாடிக்கையாக இருக்கக் கூடிய வேளையில் இந்த விஷயம் தற்போது பரபரப்பாய் பேசப்பட்டு வருகிறது.

இரவுப் பார்ட்டியில் அரங்கேறிய கொடுமை..

இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி என்றாலே சும்மாவா என்று கேட்கக் கூடிய வகையில் மிகவும் பிரமாண்டமான முறையில் இரவு நேரத்தில் நடக்க அந்த பாட்டில் வழக்கம் போல மது விருந்து நிகழ்வும் நடந்துள்ளது.

மிகச் சிறப்பான முறையில் சென்று கொண்டிருந்த இந்த பாட்டியில் திடீரென நடிகை சோனா கூச்சல் விட்டதை அடுத்து அங்கு என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள அனைவரும் முற்பட்டனர்.

எனினும் இந்த நிகழ்வில் நடிகை சோனா காவல் நிலையத்திற்கு சென்று எஸ் பி பி சரண் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டதாக புகார் அளித்து இருக்கிறார். அதுவும் பாலியல் புகார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை வழக்காக ஏற்று பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்பதை முன் வைத்திருக்கிறார்.

--Advertisement--

இதனை அடுத்து சட்டப்படி எந்த பகுதியிலும் இரவு 11 மணி வரை மட்டும் தான் பார்கள் திறந்து இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் போது சென்னையில் தி நகரில் ஒரு நடிகரின் வீட்டுக்குள் இருக்கும் பார் விடிய விடிய 30 பேருக்கும் மேல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்தது முறையா.?


அதுவும் மங்காத்தா பட வெற்றி விழாவை கொண்டாட வீட்டுக்குள்ளே குடி பார்ட்டியை வைத்து நடிகை ஒருவரை சீரழித்து காவல் துறை வரை சென்று மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கலில் சிக்கிய ஐந்து முன்னணி நடிகர்கள்..

இதனை அடுத்து இந்த விஷயத்தில் ஐந்து முன்னணி நடிகர்கள் இருப்பதை அறிந்து அனைவரும் அதிர்ந்து இருக்கிறார்கள். 2011-ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வானது தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதனை அடுத்து நடிகையை சோனா எடுத்த முடிவுகள் பற்றியும் அவர் எந்த நிலைமைக்கு தள்ளப்பட்டார் என்பது பற்றி இணையங்களில் பல்வேறு விஷயங்கள் கசிந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மேலும் தற்போது சோனா ஸ்மோக் என்ற ஒரு வெப் சீரியலை தானாகவே தயாரித்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்து இருப்பதோடு அந்த வெப் சீரியலில் தன்னை பாழாக்கிய முக்கிய நடிகர்களின் முகத்திரையை கிழிக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது.


நடிகை சோனா புது மூவ்..

அப்படி அந்த நடிகர்களின் முகத்தை கிழிக்க இவர் யார் என்று பதிலடி தந்திருக்கிறார். அந்த வகையில் அவர் பேசும்போது பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனேன்.

இப்படி நடிக்க வந்த சமயத்தில் என்னுடைய கனவு எப்படி இருந்தது தெரியுமா? ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகர்களோடு நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட என் கனவு நிராசையாக மாறி கவர்ச்சி கன்னியாக தமிழ் திரை உலகம் எனக்கு முத்திரை குத்தி விட்டது.

இதனை அடுத்து கடுமையான மன உளைச்சலில் இருந்த நான் திரை உலகமே வேண்டாம். இந்த நடிப்பு தொழிலே வேண்டாம் என்ற முடிவுகளை எடுக்க முற்பட்டேன். எனினும் அந்த சினிமா துறையில் இருந்து வெளி வர முடியாத சூழல் என்னை சுற்றி நிலவியது.


மேலும் சோனா யார் யாரெல்லாம் அவர் வாழ்க்கையை பாதித்தார்களோ? அதைப் பற்றிய சில விஷயங்களை தொடராக முக்கிய பத்திரிக்கை ஒன்றில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை அடுத்து இரு முறை காதலில் விழுந்தால் ஆண்கள் என்றாலே வெறுக்க வெறுக்க கூடிய அளவிற்கு அந்த காதல் தோல்வி மூலம் உணர்ந்து கொண்டேன்.

மேலும் ஸ்மோக் மூலம் தன் வாழ்க்கையில் நடந்த 99 % சம்பவங்களை தானே தயாரித்து இயக்க இந்த சீரியலை சில நண்பர்கள் பார்த்து அதிர்ந்திருப்பதாகவும் இந்திய திரை உலக வரலாற்றில் இது போன்ற ஒரு வெப் சீரியலை யாராலும் உருவாக்க முடியாது.


இந்த வெப் சீரியல் வெளி வந்தால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த சீரியலின் மூலம் திரையுலகம் என்ற மாயையில் விழுந்து எந்த பெண்களும் சீரழிய கூடாது என்ற நோக்கத்திற்காக தான் இதை படமாக எடுத்திருக்கிறார்.

எனவே இந்த ஸ்மோக் வெப் சீரியல் வெளி வருவதின் மூலம் வெங்கட் பிரபு வீட்டில் நடந்த அந்த பார்ட்டி முதல் கொண்டு முக்கிய பிரபலங்களின் தலைகள் உருளும்.

எனவே இந்த சீரியலை வெளி வர விடாமல் இருக்க பலமான வேலைகள் நடந்து வருவதாகவும் ஒரு வேளை இந்த வெப் சீரியல் வெளி வந்தால் திரை உலகில் நடக்கும் அநியாயங்கள் வெளிப்படையாக தெரியவரும் என்று சொல்லுகிறார்கள்.