Connect with us

விபத்துக்குப் பிறகு முதல் முறையாக மனம் திறந்த ரிஷப் பந்த்..என்ன சொன்னார் என்று பாருங்கள்..!!

indian cricket, Rishabh Pant

Sports | விளையாட்டு

விபத்துக்குப் பிறகு முதல் முறையாக மனம் திறந்த ரிஷப் பந்த்..என்ன சொன்னார் என்று பாருங்கள்..!!

அந்த பேட்டியில் ரிஷப் பந்த் கூறியதாவது: கடவுள் அருளாலும், மருத்துவ குழுவினரின் ஒத்துழைப்பாலும் நான் விரைவில் முழு உடல் நலம் பெறுவேன்.

 

கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தற்போது மெல்ல குணமடைந்து வருகிறார். மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பந்த், சில நாட்களுக்கு முன்பு ஊன்றுகோல் உதவியுடன் நடப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது அவரது பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது.

indian cricket, Rishabh Pant

மூன்று தசைநார் காயத்தால் பாதிக்கப்பட்ட பன்ட், ஐபிஎல் 2023 இன் அடுத்த சீசனில் முழுமையாக குணமடைய வாய்புகள் குறைவாகவே உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் அவருக்கு பதிலாக புதிய கேப்டனை நியமிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். “கடவுளின் கருணையாலும், மருத்துவக் குழுவின் ஒத்துழைப்பாலும் நான் விரைவில் முழு உடல் நலம் பெறுவேன்” என்று பேட்டியில் பந்த் கூறினார்.

என் வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்:

ஐஏஎன்எஸ் உடனான ஒரு நேர்காணலில், பந்த் சமீப காலங்களில் எனது உடல் அளவிலும் மனதளவிலும் பல போராட்டங்களை சமாளிக்க கற்று கொண்டுள்ளேன் என அவர் கூறினார்- என்னைச் சுற்றியுள்ள அனைத்தும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ மாறிவிட்டன என்று சொல்வது கடினம். இருப்பினும், நான் என் வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.

இன்று நான் மதிப்பது என் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே. நாம் அடிக்கடி புறக்கணிக்கும் சிறிய விஷயங்களை கூட நம் எப்படி மகிழ்ச்சியாக செய்வது பற்றி கற்று கொண்டுள்ளேன்.

indian cricket, Rishabh Pant

இன்றைக்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பெரிய காரியத்தை சாதிக்க மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு நாளும் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் சிறிய விஷயங்களை அனுபவிக்க மறந்துவிடுகிறோம்.

குறிப்பாக எனது விபத்துக்குப் பிறகு, தினமும் பல் துலக்குவது மற்றும் மொட்டை மாடி வெயிலில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது போன்று சின்ன சின்ன விசயங்களில் மகிழ்ச்சி அடைகிறேன். நம் இலக்குகளை அடைய பாடுபடும்போது, ​​வாழ்க்கையில் வழக்கமான விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது போல் தோன்றுகிறது.
என் வழியில் வரும் ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்க இது எனக்கு ஒரு பாடம்.

indian cricket, Rishabh Pant

பந்த் கிரிக்கெட்டை மிஸ் செய்கிறார்:

பேன்ட்டின் வழக்கமாக ஒரு நாளைக்கு மூன்று முறை பிசியோதெரபி செய்கிறார். அவர் கூறியதாவது- நான் தினமும் பழங்கள் மற்றும் பழச்சாறு உண்டு வாழ்கிறேன்.நான் சரியாக நடக்க ஆரம்பிக்கும் வரை இது தொடரும் என்று அவர் கூறினார்- என் வாழ்க்கை உண்மையில் அதைச் சுற்றியே இருக்கிறது, ஆனால் நான் இப்போது என்னுடைய காயம் முழுமையாக குணமாவதில் கவனம் செலுத்துகிறேன்.இருந்தாலும் என்னுடைய ஆரம்ப கால கிரிக்கெட் பயணத்தை ரொம்பவும் மிஸ் பண்ணுறேன் என்று தனது தற்போதய மனநிலை எப்படி உள்ளது என மனம் திறந்து கூறினார்.

indian cricket, Rishabh Pant

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top