Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கமலுடன் ரகசிய திருமணம்.. பாலிவுட் பாலியல் சீண்டல்..அதிர வைக்கும் நடிகை ஶ்ரீதேவி மறைவின் மர்மங்கள்..

Tamil Cinema News

கமலுடன் ரகசிய திருமணம்.. பாலிவுட் பாலியல் சீண்டல்..அதிர வைக்கும் நடிகை ஶ்ரீதேவி மறைவின் மர்மங்கள்..

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகிலும் பாலிவுட் திரைப்படங்களில் அதிகமாக நடித்து தனக்கு என்று ஓர் அற்புத இடத்தை பிடித்துக் கொண்ட ஸ்ரீதேவியின் மரணம் இன்று வரை ஒரு புரியாத புதிராகவே உள்ளது.


மேலும் ஸ்ரீதேவியின் மரணத்தை பொறுத்த வரை இயற்கை மரணம் அல்ல அது தற்செயலாக நிகழ்ந்த மரணம் என்பதை உறுதி செய்து விட்டார்கள் அது உங்களுக்கு தெரியும்.

நடிகை ஸ்ரீதேவி..

நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த தனது குடும்ப விழாவுக்காக கணவர் போனி கபூரோடு சென்று இருக்கிறார். இதனை அடுத்து இரவு நடந்த நிகழ்வுகளை அடுத்து மறுநாள் காலை ஹோட்டலில் இருக்கும் குளிக்கும் தொட்டியில் பிணமாக இருக்கிறார்.

இதையும் படிங்க: இதனால தான் மதகஜ ராஜா இன்னும் ரிலீஸ் ஆகல.. முதன் முறையாக போட்டு உடைத்த சுந்தர் சி..!


இதனை அடுத்து இந்த நிகழ்வினை கண்டறிய துபாய் போலீசார் கையில் எடுத்த நிலையில் இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் இது பற்றி பெரிய அளவில் பேசும் பொருளாக மாற்றினார்கள்.

--Advertisement--

கமலுடன் ரகசிய திருமணம்..

16 வயதினிலே படத்தில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஸ்ரீதேவி கமலஹாசன் உடன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கமல் பங்களாவில் தான் இருப்பதாகவும் செய்திகள் வெகுவாக பரவியது.

எனினும் கமலஹாசன் அது பற்றி சொல்லும் போது ஸ்ரீதேவி தன்னிடம் ஒரு சகோதரியை போல தான் பழகினார் என்றும் என்னை அண்ணன் என்று தான் அழைப்பார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் கிசு கிசுக்கள் வந்ததற்கு காரணம் அந்த படம் சிறப்பாக ஓட வேண்டும் என்பதற்காக வந்தது என்பதை தெளிவுபட கூறியிருக்கிறார்.

ஸ்ரீதேவி மறைவில் மர்மங்கள்..

இதனை அடுத்து இது ஒரு இயற்கை மரணம் கிடையாது. தற்கொலையும் அல்ல ஏன் கொலையாக இருக்கக் கூடாது. அதுவும் அவர் கணவரை செய்திருக்கக் கூடாது என்ற வகையில் சந்தேக கண்களோடு பார்க்க ஆரம்பித்தார்கள் போலீசார்.


இதற்கு காரணம் நாடுகளில் ஸ்ரீதேவிக்கு மரணம் ஏற்பட்டால் ஓமன் நாட்டில் போடப்பட்டிருக்கும் இன்சூரன்ஸ் கிடைக்கும் என்ற ரீதியில் இந்த நிகழ்வு நடந்திருக்கலாமா? என்ற ரீதியிலும் யோசிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு பாம்பின் உடைய விஷம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய ஆர்கனை செயலிழக்க செய்து உள்ளனர். அதற்கான ஆதாரங்கள்  இருக்கு நான் போய் சுப்ரீம் கோர்ட்ல இது சம்பந்தமான தகவல்களை நான் வந்து கொடுக்கப் போகிறேன் என தீப்தி பனர்ஜி கூறி இருந்தது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து ஸ்ரீதேவிக்கு செல்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பாம்பு வகைகளில்  ஒன்றின் விஷத்தை அவர்கள் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் கொடுத்திருக்கலாம் எனக் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து கணவர் போனி கபூரை உண்மை அறிதல் பரிசோதனைகளின் மூலம் பல்வேறு கட்டங்களில் விசாரணையில் ஈடுபட்ட துபாய் போலீசார் அவர் குற்றவாளி அல்ல என்பதை தெளிவு படுத்தியது.

இதையும் படிங்க: “ஷூட்டிங் ஸ்பாட்டில் அதெல்லாம் சாதாரணமா நடக்கும்.. என் புருஷன் கூடவே இருப்பாரு..” நீலு ஆண்ட்டி பேச்சு..!


மேலும் ஒரு பேட்டியில் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம் அவர் சரியான நேரத்திற்கு உணவினை உட்கொள்ள மாட்டார். மேலும் அதிக அளவு டயட்டில் இருந்தது தான் என்பதை தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு தன் அழகை சரியாக பராமரிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டிய அவர் அதற்காக பல சிகிச்சைகளையும் மேற்கொண்டதன் காரணத்தால் உடல் வலிமை இழந்து காணப்பட்டார்.

இது போன்ற பல காரணங்களை ஸ்ரீதேவியின் மரணத்தில் உள்ளது என்று பல்வேறு கருத்துக்கள் இன்று வரை நிலவி வருகிறது. எனினும் உண்மை என்ன என்பது இது வரை வெளிவரவில்லை என்றுதான் பலரும் கருதுகிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top