நடிகை ஸ்ரீரஞ்ஜினி கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான அலைபாயுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
ஆனால், அதற்கு முன்பிருந்தே தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீரஞ்சனி பல்வேறு முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.
வருடத்திற்கு ஐந்து முதல் பத்து படங்கள் நடித்து விடும் இவர் கடந்த வருடம் திருச்சிற்றம்பலம் டிரைவர் ஜமுனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்திய பேட்டி, ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீரஞ்ஜினி நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
அவருடன் உதயா, போக்கிரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தேன். ஆனால், அசின் அம்மாவாக நடித்திருந்தேன். அதன் பிறகு பிகில் திரைப்படத்தில் எனக்கு ஒரு காட்சி இருந்தது.
அது மிகவும் அழகான காட்சி, ரசிகர்கள் நிச்சயம் அந்த காட்சியை ரசித்து இருப்பார்கள். அவ்வளவு அழகான காட்சி.
ஆனால் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்கி விட்டார்கள். அதன் பிறகு விஜய் சாரை பார்க்கும் போதெல்லாம் எதற்கு இந்த காட்சியை நீக்கினீர்கள் என்று கேட்கலாம் என்று தோன்றும்.
ஆனால் அவரிடம் கேட்டால் அது நல்லா இருக்காது என்று பல்லை கடித்துக் கொண்டு விட்டு விடுவேன். அடுத்த ஏதேனும் சிறந்த வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக விஜய் சார் உடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார் நடிகை ஸ்ரீரஞ்ஜினி.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.