“இதனால தான் 40 வயசாகியும் கல்யாணம் பண்ணல..” அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்ருதி ராஜ்..!

“இதனால தான் 40 வயசாகியும் கல்யாணம் பண்ணல..” அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்ருதி ராஜ்..!

சினிமாவில் ஹீரோயின்களாக நடிக்கும் நடிகைகளை போலவே, டிவி சீரியல்களிலும் தொடர்ந்து நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர்.

அப்படிப்பட்டவர்தான் நடிகை ஸ்ருதிராஜ். இவர் ரசிகர்களின் மத்தியில் நன்கு அறிமுகமான சீரியல் நடிகையாக இருக்கிறார்.

ஆனால் ஸ்ருதிராஜ், சீரியல்களில் நடிக்க வரும் முன்பே பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 1995ம் ஆண்டில் அக்ரஜன் என்ற மலையாள படத்தில்தான் அறிமுகமானார்.

அடுத்து தமிழில் நடிகர் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி படங்கள் சிலவற்றிலும் ஸ்ருதிராஜ் நடித்திருக்கிறார்.

கடைசியாக 2008ம் ஆண்டில் இயக்கம் என்ற தமிழ் படத்தில் நடித்த பிறகு, நேராக சீரியலில் நடிக்க வந்துவிட்டார் ஸ்ருதிராஜ். ஏனெனில் சினிமாவில் அவருக்கான இடம் கிடைக்கவில்லை.

ஸ்ருதிராஜ்..

கடந்த 2009ம் ஆண்டில் சன் டிவியில் தென்றல் என்ற சீரியலில் நடித்து மக்களின் மனதில் ஸ்ருதிராஜ் இடம்பிடித்தார். தொடர்ந்து திருமதி செல்வம், ஆபீஸ், அழகு, தாலாட்டு போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

சீரியலில் நடிப்பது மட்டுமின்றி சூப்பர் சமையல், மாத்தி யோசி, வணக்கம் தமிழா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கினார்.

நோ கல்யாணம்..

இதுவரை நடிகை ஸ்ருதி ராஜூக்கு இன்னும் நோ கல்யாணம். அதாவது அவருக்கு 40 வயது கடந்தும் திருமணம் நடக்கவில்லை.

இதுகுறித்து ஸ்ருதி ராஜூவிடம் கேட்ட போது, எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக வராது.

அதனால் திருமணம் குறித்து நான் யோசிக்கவில்லை. என்னை பற்றியும், என் திருமணத்தை பற்றியும் என் பெற்றோர் பார்த்துக்கொள்வார்கள், என்று கூறியிருக்கிறார்.

எதை திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக வருவதில்லை என்பதால்தான், 40 வயதாகியும் திருமணம் செய்யவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லி தன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறார் ஸ்ருதிராஜ்.