படங்களில் நடிக்காமலே.. இப்படித்தான் ஆண்ட்ரியாவுக்கு பல கோடி சொத்து வந்தது.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

நடிகை ஆண்ட்ரியா ஆரம்ப காலத்தில் பின்னணி பாடகியாக திரைப்பட பாடல்கள் பலவற்றைப் பாடி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.


அந்த வகையில் இவர் அந்நியன் படத்தில் பாடிய கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற திரைப்பட பாடலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை ஆண்ட்ரியா..

தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கு ஜோடியாக பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக கௌதம் மேனன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து இவருக்கு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக மாறினார்.

மேலும் இவர் விஸ்வரூபம் அரண்மனை தரமணி வடசென்னை போன்ற பல தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தமிழில் முன்னணி ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

---- Advertisement ----

சுந்தர் சி யின் இயக்கத்தில் வெளி வந்த அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு போதிய பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்காததை அடுத்து மற்ற படங்களில் நடித்து வரும் இவர் காதல் தோல்வியால் சில ஆண்டுகள் சினிமா பக்கம் தலை காட்டவில்லை.


அதிக படங்களில் நடிக்காமல் சொத்து சேர்ந்த விவகாரம்..

மேலும் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததற்கு காரணம் கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல பாடகி சுசித்ராவின் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளி வந்தது.

அதில் தன்னை விட வயது குறைந்த அனிருத்தோடு படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளி வந்து சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்.

உண்மையைச் சொன்ன பிரபலம்..

இந்நிலையில் மீண்டும் சுச்சி லீக்ஸ் விஸ்வரூபமாக வடிவம் எடுத்து இருக்க கூடிய வேளையில் மீண்டும் தனுஷ் ஐஸ்வர்யா, விஜய் திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் குறித்து பேசி வரும் பாடகி சுசித்ரா ஆண்ட்ரியா குறித்தும் பேசியிருக்கிறார்.

அவர் பேசிய பேச்சில் யாரும் நினைப்பதை விட ஆண்ட்ரியாவிடம் 200 அல்லது 300 மடங்கு அளவு சொத்து இருப்பதாகவும் 200 வைர நகைகளை வைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.


அது மட்டுமல்லாமல் இந்த வைர நகைகள் எல்லாம் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கும் பதில் அளித்து இருக்கக் கூடிய இவர் ஆண்ட்ரியாவின் வீட்டை சோதனை செய்தால் அவருடன் தொடர்பில் இருந்த பலரும் சிக்குவார்கள் என்று சொல்லி அதிர்ச்சி அலையை ஏற்படுத்திவிட்டார்.

மேலும் ஆண்ட்ரியாவிடம் மினி கூப்பர் கார் இருக்கிறது. இது போன்ற வசதிகள் எல்லாம் அவரை எப்படி தேடி என்று சுசித்ரா கேள்வி கேட்டு இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் இதை பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் பட்டிமன்றம் போட்டு பேசக்கூடிய அளவு பிரபலமாகிவிட்டது.


இந்நிலையில் ரசிகர்கள் இன்னும் பல பிரபலங்களை பற்றி பாடகி சுசித்ரா என்னென்ன சொல்வார்களோ? எப்படி சொல்வாரோ? என்று புரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

எனவே இது பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள யாராவது தக்க நடவடிக்கைகளை எடுப்பார்களா? என்ற ரீதியில் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

---- Advertisement ----