என்னை கட்டிக்குறதுக்கு முன்னாடியே அவனுக்கு அந்த பழக்கம் இருந்துச்சு.. பகீர் கிளப்பிய சுசித்ரா..!

ஆர் ஜே சுச்சி என்று அழைக்கப்படும் பாடகி சுசித்ரா தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளராக திகழ்ந்தவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பின்னணி பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.

பின்னணி பாடகியாக மாறுவதற்கு முன்பு ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றிய இவர், தற்போது ரேடியோ ஒன் பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

என்ன கட்டிக்குறதுக்கு முன்னாடியே..

அண்மை நாட்களாக பாடகி சுசித்ராவின் பேட்டிகள் தமிழகத் திரை உலகில் இருக்கும் பிரபலங்களை பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் முகம் சுளித்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து தொடர்ந்து இது போல பேட்டிகளை கொடுத்து வரக்கூடிய நிலையில் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அவரது ஒவ்வொரு பேட்டியும் உள்ளது என்று சொல்லலாம்.

---- Advertisement ----

அந்த வகையில் இவர் தனது சுச்சி லீக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் அந்தப் பிரபலங்களை மட்டுமல்லாமல் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை இந்த விஷயத்தை செய்தவர்கள் என் கணவரிடம் இருந்து எனது இணைய அக்கவுண்டைப் பெற்றுக் கொண்ட தனுஷ் மற்றும் திரிஷா என்பது போல கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்தார்.

அந்த வகையில் தற்போது அவர் கூறிய தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என்று கூறுவது தான் முற்றிலும் உண்மை.

அவனுக்கு அந்த பழக்கம் இருந்துச்சு..

இதற்கு காரணம் தன் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை திருமணம் ஆன இரண்டு வருடங்களிலேயே கண்டுபிடித்து விட்டேன் என்பதை பேசியிருக்கும் பாடகி சுசித்ரா தற்போது தன்னை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே கார்த்திக் குமாருக்கு ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் பழக்கம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் திருமணமாகி குழந்தை இல்லாத சமயத்தில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்த போது எங்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவரிடம் தான் குறை இருக்கிறது என சொல்லி இருக்கிறார்கள்.

பகீர் கிளப்பிய சுசித்ரா..

இந்நிலையில் திரைத்துறையில் இருப்பவர்கள் சிலர் மூலம் கார்த்திக் குமார் ஓரினச் சேர்க்கையாளர் என்று நான் அறிந்திருக்கிறேன் என மருத்துவரிடம் கூறினேன்.

அப்போதும் நான் அவருடைய சில நடவடிக்கைகளை கவனித்த போது எனக்கு இந்த சந்தேகம் எழுந்தது என மருத்துவரிடம் பதில் அளித்தேன்.

ஆனால் திருமணத்திற்கு முன்பே ஓரினச்சேர்க்கை பழக்கம் கார்த்திக் குமார் இருந்திருக்கிறது என்ற பகீர் தகவலை கிளப்பி இருக்கிறார் சுசித்ரா.

அந்த வகையில் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் எந்த குற்றச்சாட்டு பற்றி மறுபக்கம் நடிகர் கார்த்திக் குமார் என்னை ஓரினச் சேர்க்கையாளர் என்று சொல்வதால் நான் அசிங்கப்பட போவதில்லை இன்னும் பெருமையாக உணர்வேன் என்று வீடியோவை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இணையத்தில் இந்த விஷயமானது பரபரப்பாக பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இந்த விஷயத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் தினம் தினம் வெளிவரக்கூடிய இது போன்ற தகவல்களால் எது உண்மை எது பொய் என்பதை உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

---- Advertisement ----