“என்னோட தொப்புளில் அதை பண்ணும் போது..” வெக்கத்துடன் ரகசியம் உடைத்த சுகன்யா..!

“என்னோட தொப்புளில் அதை பண்ணும் போது..” வெக்கத்துடன் ரகசியம் உடைத்த சுகன்யா..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நடிகைகளின் உடம்பில் என்னென்ன செய்யலாம் என்று டைரக்டர் யோசித்த காலமும் இருந்தது. அதுதான் 1990களில் தமிழ் சினிமா ரசிகர்கள், பெண் நடிகைகள் மீது பித்து பிடித்து திரிந்த காலமாக கூட சொல்லலாம்.

ஏனெனில் சின்னதம்பி குஷ்பு கோவில் கட்டிய காலம் அதுதான். ரஜினி, கமல் படத்தை விட ஷகிலா படம் பார்க்க அதிக ரசிகர்கள் தியேட்டர்களில் திரண்ட காலகட்டமும்தான் அதுதான். பல கதாநாயகிகள், கவர்ச்சி நாயகிகளாக மாறியதும் அப்போதுதான்.

நக்மா வயிற்றில் ஆப்பாயில்

லவ் பேர்ட்ஸ் என்ற படத்தில், நக்மா வயிற்றில் பிரபுதேவா ஆப்பாயில் போட, யோசனை செய்தார் அந்த படத்தின் டைரக்டர் பி வாசு. இன்னும் சில படங்களில் நடிகையின் தொப்புளில் எண்ணெய் விட்டு ரசித்து படம் எடுத்தனர் சில இயக்குனர்கள்.

இன்னும் சில இயக்குனர்கள், கடற்கரை மணலை அள்ளி மல்லாக்க படுத்திருக்கும் கதாநாயகிகளின் வயிற்றில், தொப்புளில் கொட்டி அழகு பார்த்தனர். நாட்டாமை படத்தில் நடிகை சங்கவி மீது சேற்றை வாரிக்கொட்டி, அதை டியூப் தண்ணீரில் பீய்ச்சியடித்து கழுவி ரசித்தார் டைரக்டர் கே எஸ் ரவிக்குமார்.

சினேகா வயிற்றில் மீன் குஞ்சுகள்

ஒரு படத்தில், ஒரு பாடல் காட்சியில் சினேகாவின் தொப்புள் பகுதியில் தொட்டியில் வளர்க்கப்படும் கலர் மீன் குஞ்சுகளை, சிறு மீன்களை துள்ள வைத்திருப்பார் இயக்குனர்.

இதையும் படியுங்கள்: கடைசி வரை மோகன் இதை பண்ணவே இல்ல.. ரகசியம் உடைத்த இயக்குநர் யார் கண்ணன்

இப்படி ஆளாளுக்கு அவரவர் கற்பனைத் திறனுக்கேற்ப நடிகைகளில் வயிற்றில் கபடி விளையாடி இருக்கின்றனர். ஆனால் அந்த காலகட்டத்தில் இதுபோன்ற காட்சிகள் மிகப்பெரிய விஷயங்களாக ரசிகர்கள் மத்தியில் கவனித்து பேசப்பட்டது என்பதையும் மறுக்க முடியாது.

சுகன்யா தொப்புளில் பம்பரம்

அதே போல் சின்னக்கவுண்டர் படத்தில், நடிகை சுகன்யா வயிற்றில் தொப்புளில் பம்பரம் விட்டு ரசித்தார் டைரக்டர் ஆர்வி உதயகுமார். அதாவது, சின்னக்கவுண்டர் விஜயகாந்திடம், சவால்விட்டு தோற்றுப் போவார் சுகன்யா. பதிலுக்கு அவர் வயிற்றில் பம்பரம் விடுவார் கேப்டன்.

படத்தில் இந்த காட்சி அவசியமில்லாத ஒன்றுதான். எனினும் ரசிகர்களை கிளுகிளுப்பூட்ட இப்படி ஒரு சீரிய சிந்தனையில் தொப்புளில் பம்பரம் விட வைத்தார் இயக்குனர் ஆர்வி உதயகுமார்.

இதையும் படியுங்கள்: இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? திகட்ட திகட்ட கிளாமர் விருந்து வைக்கும் பட்டாஸ் ஹீரோயின்..!

எனக்கு ரொம்ப பயம்

சின்னக்கவுண்டர் படத்தில், தொப்புளில் பம்பரம் விடப்பட்ட அனுபவம் குறித்து நடிகை சுகன்யா, நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, எனக்கு ரொம்ப பயம். ஷூட்டிங் முடிச்சுட்டு ரூமுக்கு வந்தா, அதுதான் பிராக்டிஸ் பண்ணனும்ன்னு சொன்னாங்க. டான்ஸ், வேற ஏதாவது சீன் பிராக்டிஸ்னா ஓகே. பம்பரம் விடறதுக்கு எல்லாம் பிராக்டிஸான்னு ஆச்சரியமா இருந்தது.

பண்ணவே மாட்டேன்னு சொன்னேன்

ரூம்ல காரிடர்ல உட்கார்ந்து எல்லாம் பிராக்டிஸ் பண்ணீட்டு இருப்பாங்க. எனக்கு 3 அசிஸ்டென்ஸ்ட் வேற இருந்தாங்க. ஆனா கடைசி வரைக்கும் நான் பண்ணவே மாட்டேன்னு சொன்னேன். அப்புறம் டேக் அப்படீன்னாங்க. நான் ரெடின்னேன். அப்படியே டேக் எடுத்துட்டாங்க, என்று அந்த நேர்காணலில் சொல்லி இருக்கிறார் சுகன்யா.

“என்னோட தொப்புளில் பம்பரம் விட்ட போது பயமாக இருந்தது” என வெக்கத்துடன் ரகசியம் உடைத்திருக்கிறார் நடிகை சுகன்யா.