“கிட்டிப் – புள் ” விளையாட்டு நியாபகம் இருக்கா?

நமக்கென ஒரு பாரம்பரியம், பண்பாடு இருந்தது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதுபோல்தான் விளையாட்டிலும் நிறைய வழி முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தார்கள். அவற்றில் ஒன்றுதான் இந்த “கிட்டிப் – புல்” எனப்படும்  பாரம்பரிய விளையாட்டு. இந்த விளையாட்டு இன்னும் கிராமப்புற பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்ற மற்றொரு பெயரும் இவ்விளையாட்டுக்கு உண்டு.

இந்த விளையாட்டுக்கு தேவையான பொருள்கள்:  

வெறும் 15 இன்ச் நீளமுள்ள ஒரு குச்சி மற்றும் 4 இன்ச் நீளமுள்ள மற்றொரு சிறிய குச்சி. இந்த நாலு இன்ச் நீளமுள்ள பகுதியின் இரு முனைகளும் கூராகப்பட்டு இருக்கும். 

இது ஒரு குழு விளையாட்டு. இதில் 15 இன்ச் குச்சியை பேட்டாக சிறுவர்கள் பயன்படுத்துவார்கள். பந்துக்கு பதிலாக 4 இன்ச் நீளமுள்ள இரு முறைகளும் கூராக்கப்பட்ட குச்சி  பயன்படும்.

---- Advertisement ----

இந்த விளையாட்டும் ஒரு பெரிய மைதானத்தில் தான் விளையாடப்படும். இதில் 2 பேர் முதல் 10 பேர் வரை குழுவாகக் கூடி விளையாடலாம். 

எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன் தரையில் சிறிதாக ஒரு குழி போல் ஏற்படுத்தி அந்த குழியில் 4 இன்ச் நீளமுள்ள குச்சியை வைத்து பின் அந்த குழிக்குள் 15 இன்ச் நீளமுள்ள குச்சியை வைத்து அதனை தட்டுவார்கள். 

அந்த குச்சி எவ்வளவு தூரம் செல்கிறதோ  பிரச்சினை இல்லை ஆனால்  அதனை கேட்ச் பிடித்து விட்டால் விளையாடியவர் அவுட். பிடிக்கவில்லை என்றால் அந்த சிறிய குச்சி எவ்வளவு தூரத்தில் விழுந்து இருக்கிறதோ அதனை அந்த தூரம்வரை  15 இன்ச் குச்சியை வைத்து தரையிலிருந்து அதாவது தட்டப்பட்ட இடத்திலிருந்து ஆள விடுவார்கள். அளவுகள் ஐந்து ,10, 15 …. என்று அது விழுந்த தூரத்தைப் பொறுத்து அமையும். இதனை அவர்கள் பாயிண்ட் டாக எடுத்துக் கொள்வார்கள். 

இந்த “கிட்டிப்புள் ” விளையாட்டை பார்த்தான் கிரிக்கெட் விளையாட்டு வந்ததாக எங்கள் ஊரில் உள்ள  முதியவர்கள் கூறுவார்கள்.

---- Advertisement ----