சைபர் க்ரைம் போலீஸில் சிக்கிய நடிகை தமன்னா..! பரபரப்பில் திரையுலகம்..!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கல்லூரி என்ற படத்தில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடித்து தமன்னா அவரது எளிமையான நடிப்பால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தமன்னா

தொடர்ந்து தோழா, பையா, சுறா, படிக்காதவன், அயன், வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, முன்னணி கதாநாயகியாக தமன்னாமாறினார்.

ஆனால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு படவுலகம் பக்கம் சென்றார். அங்கும் தாராளமான கவர்ச்சி காட்டி நிறைய படங்களில் நடித்தார்.

பாலிவுட் சினிமா

தொடர்ந்து இன்னும் அதிக கோடிகளில் சம்பளம் வாங்க ஆசைப்பட்ட தமன்னா, அடுத்ததாக பாலிவுட் சினிமா உலகில் நுழைந்தார். அங்கே அவர் காட்டிய தாராள கவர்ச்சியை பார்த்து, அங்கிருந்து பாலிவுட் நடிகைகளே மிரண்டு போய்விட்டனர்.

--Advertisement--

படுக்கையறை காட்சிகளில் தாராளம்

தொடர்ந்து இந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்கிடையே வெப் சீரியஸ்களிலும் தமன்னா நடித்தார். இதில் படுக்கை அறை காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு அவர் தாராளமாக நடந்து கொண்டதால், அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.

தவிர அவரது எல்லை மீறிய கவர்ச்சியை காண்பதற்கு என்றே ரசிகர் கூட்டம் உருவானது. சினிமா விருது விழாக்கள் சினிமா நடிகர்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்களில் இல்லங்களில் நடந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றில், தமன்னா தவறாமல் கலந்துக்கொண்டார்.

அந்தரங்கங்களை காட்டி

அரைகுறை ஆடைகளில் அங்கு வந்து தன் உடலின் அந்தரங்கங்களை எடுப்பாக காட்டி ரசிகர்களை பார்ப்பவர்களை எல்லாம் தன்பக்கம் வச,கரித்தார் தமன்னா.

இதற்கிடையே நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக காவாலா என்ற ஐட்டம் சாங்குக்கு குத்தாட்டம் போட்டு அதன் மூலமும் மிகப்பெரிய பிரபலத்தை அடைந்தார்

மும்பை போலீசார் சம்மன்

இந்நிலையில் நடிகை தமன்னாவுக்கு மும்பை போலீசார், வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பி உள்ளது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்

கடந்த 2023 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை விஐஏகாம் என்ற நிறுவனம் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை பெற்றிருந்த நிலையில், பயர் பிளே மூலமாக கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் உரிமம் பெற்ற நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

தமன்னாவுக்கு தொடர்பு

இதில் விளம்பரங்களில் நடித்த வகையிலும், ஐபிஎல் போட்டிகளை நேரடியாக டெலிகாஸ்ட் செய்த வகையிலும் தமன்னாவின் பெயரும் அடிபடுகிறது. அவரும் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருந்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

இதையடுத்து, விஐஏகாம் நிறுவனம், மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி நடிகை தமன்னாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

சைபர் க்ரைம் போலீஸில் சிக்கிய நடிகை தமன்னா குறித்து தகவல் வெளியான நிலையில் திரையுலகம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.