நம்ம சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் மாடலிங்கில் கால் பதித்து அடுத்து, டி.வி. சீரியல்! இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் அழகின் உச்சம். இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.
ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.
அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.
சமீபத்தில் கூட அசோக் செல்வனுடன் “Oh my கடவுளே” படத்தில் கூட நடித்தார். அந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார். திகிலுடன் கூடிய படமாக உருவாகும் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் வாணி போஜன் இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முண்டா பனியன்..மூக்கில் வளையம் என செம்ம மாடர்னாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் பாத்தாலே கிக் ஏறுதே என்று உருகி வருகிறார்கள்.