இதுவரை அடக்க ஒடுக்கமாக இருந்த ஷாக்சி நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பார்பி பொம்மையையும், மெழுகு சிலையை சேர்த்து செஞ்ச அழகி நீ என ரசிகர்கள் கவிதை பாடும் அளவிற்கு அழகு இருந்தாலும் அவ்வப்போது சாக்ஷி அகர்வால் செய்யும் வேலை ரசிகர்களை கடுப்பேற்றி விடுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்ஷியின் கைவசம் ஆர்யாவின் ‘டெடி’, ஜிவி பிரகாசின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, லெட்சுமி ராயின் ‘சிண்ட்ரெல்லா’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.
சைடு கேப்பில் மாடலிங்கிலும் கல்லா கட்டும் சாக்ஷி அகர்வால் படு பயங்கரமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார். காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் சாக்ஷி வாய்ப்பை பெற நடிகைகள் செய்யும் யுக்த்தியை தான் செய்து வருகிறார்.
அதாங்க கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது. லாக் டவுன் சமயத்தில் தன் ஒர்க் அவுட் மற்றும் கவர்ச்சி போட்டோக்களால் பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டார் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இவர் போட்டோ அப்டேட் வெளியிட மாட்டாரா என ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மொய்ப்பது வாடிக்கையான செயல். புடவையில் கூட அதீத கவர்ச்சி காமிக்க முடியும் என நிரூபித்தவர் ஷாக்சி என்பது குறிப்பிடதக்கது.