90களில் சீரியல் வில்லியாக பிரபலமானவர் தேவிப்பிரியா. அதாவது சின்னத்திரை நீலாம்பரி என்றும் அழைக்கப்பட்டார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சக்தி தொடரின் மூலம் தேவிபிரியா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.
இவர் போலீசாக வேண்டும் என்பது தான் கனவாக வைத்திருந்தார். அதற்கு பலனாக பாரதிராஜா இயக்கத்தில் சீரியல் ஒன்றில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைத்து ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
வில்லி கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தவர். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நானும் நடிகை வரிசையில் இருக்கிறேன் என்று நினைவு படுத்திக் கொண்டிருந்தார்.
அந்த வகையில் தற்போது ஃபுல் மேக்கப்பில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நீங்க மட்டும் எவ்வளவு வயசானாலும் அப்படியே இருக்கீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது
கணீர் குரலும் தான். சின்னத்திரையில் நீண்ட காலமாக நடித்துவரும்
தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார்.
சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில்
சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து
பிரபலமானார்.தொலைக்காட்சி சீரியல்களில் 90ஸ் காலக்கட்டத்தில் சீரியல் பார்த்தவர்கள்
எல்லாவருக்கும் நடிகை தேவி ப்ரியாவை நன்றாகவே தெரிந்திருக்கும். வில்லி
கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி வந்தவர் தான் தேவிப்ரியா.
சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், குட்டியான கவுன் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், என்னா கும்மு.. வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா…? என்று வர்ணித்து வருகிறார்கள்.