Connect with us

News

மதுரை முத்து மனைவி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு..! அப்போ.. அந்த தகவல் உண்மை தானா..?

By TamizhakamJune 6, 2024 1:41 PM IST

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று சொல்லுவார்கள். அப்படி நம்மை வாய் விட்டு சிரிக்க வைக்க கூடிய காமெடியன்கள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் விஜய் டிவியின் மூலம் புகழ்பெற்ற காமெடி நடிகர் மதுரை முத்து பற்றி அவரது மனைவி சொன்ன தகவல் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எந்த புத்தில் என்ன பாம்பு இருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது காமெடி நடிகரும் பட்டிமன்ற பேச்சாளருமான மதுரை முத்து பற்றி வெளி வந்திருக்கும் விஷயம்மானது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

மதுரை முத்து..

மதுரை முத்து மக்களை சிரிக்க வைப்பதில் கைதேர்ந்தவர். இவரது காமெடிகளை பலரும் ரசித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் மனம் விட்டு சிரித்தும் இருக்கிறார்கள். 

அந்த வகையில் தமிழக மக்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடம் பிடித்திருக்கும் மதுரை முத்துவின் செயலை பார்த்து பலரும் முகம் சுளித்து இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் மதுரை முத்து தனது சொந்த வாழ்க்கையில் பல்வேறு வகையான சிக்கல்களையும் சோகங்களையும் கடந்து வந்திருந்தாலும் மக்களை எப்போதும் சிரிக்க வைப்பதில் பஞ்சம் வைக்க மாட்டார் என சொல்லலாம்.

முத்துவின் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு..

மேலும் மதுரை முத்துவிற்கும் எல்லோருக்கும் ஏற்படுவது போல காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து முதல் முதலாக லேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.

குழந்தைகள் பிறந்த பிறகு இவர்கள் மணவாழ்க்கை சீரும் சிறப்புமாக சென்று கொண்டிருந்ததை  அடுத்து 2016-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது முதல் மனைவி மரணம் அடைந்தார்.

முதல் மனைவியின் இழப்பில் இருந்து மீண்டு வர முடியாத மதுரை முத்து மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். இதனை அடுத்து நண்பர்களின் வற்புறுத்தறையின் பெயரில் இரண்டாவது மனைவியாக நீத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் தனது முதல் மனைவியின் நெருங்கிய தோழி தான் இந்த இரண்டாவது மனைவி என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. இந்த தம்பதிகளுக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அப்ப விஷயம் உண்மையா..

இந்நிலையில் மதுரை முத்துவின் இரண்டாவது மனைவி நீத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து சோகமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

அந்த பதிவில் இவர் எனக்கு என்று ஒரு உயிர் வேண்டும். அது என்னை மட்டும் நேசிக்க வேண்டும். அவருக்காக நான் பொட்டு வைத்து சந்தோசமாக இருக்க வேண்டும் என ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து கொண்டே போகிறேன் என்று கண்ணீரோடு பதிவிட்டு இருக்க கூடிய விஷயம் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதனை அடுத்து மதுரை முத்துவின் இரண்டாவது மனைவி அவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்களா? அல்லது இவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்தில் நடக்கப்போகிறதா? என்ற ரீதியில் தற்போது பேச்சுக்கள் பரவலாக அடிபட்டு வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top