Connect with us

36 முறை அதை பண்ணுனார்.. திருமணமான பெண்ணுடன் ஜி.வி பிரகாஷ்.. லீலைகளை கூறிய பிரபலம்..!

36 முறை அதை பண்ணுனார்.. திருமணமான பெண்ணுடன் ஜி.வி பிரகாஷ்.. லீலைகளை கூறிய பிரபலம்..!

யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர் ரகுமான் போலவே சிறுவயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். ஜிவி பிரகாஷ் தன்னுடைய 17 வயதிலேயே தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

அவர் இசையமைத்த வெயில் திரைப்படத்தில் அப்பொழுது இரண்டு பாடல்கள் பெரிய வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து முக்கியமான ஒரு இசையமைப்பாளராக மாறி இருந்தார் ஜிவி பிரகாஷ். தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கும் வரவேற்புகள் கிடைக்க தொடங்கின.

36 முறை அதை பண்ணுனார்

திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ். இப்பொழுது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் இசையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். பெரும்பாலும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படங்களை விட இசையமைக்கும் திரைப்படங்களுக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இப்பொழுதும் இருந்து வருகின்றன.

முக்கியமாக தங்கலான் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த பாடல்கள் பலவும் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து நடிப்பதை காட்டிலும் அவர் இசையமைப்பதில் ஆர்வம் காட்டினால் தேவலாம் என்று ரசிகர்கள் வட்டாரத்தில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

திருமணமான பெண்ணுடன் ஜி.வி பிரகாஷ்

ஜி.வி பிரகாஷ் நடித்த திரைப்படத்திலேயே அதிக விமர்சனத்திற்கு உள்ளான திரைப்படம் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம். அந்த திரைப்படத்தில் நிறைய இரட்டை அர்த்த வசனங்களும் ஆபாசமான காட்சிகளும் என்பதாக இருந்தது.

இந்த நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு செய்தியை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் மனிஷா யாதவ் ஜிவி பிரகாஷிற்கு காதலியாக நடித்திருந்தார்.

லீலைகளை கூறிய பிரபலம்

அதில் ஒரு காட்சியில் மணிஷா யாதவிற்கு முத்தம் கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்பொழுது ரீடேக் செல்கிறேன் என்று 36 முறை அந்த காட்சியை திரும்பத் திரும்ப செய்தார் ஜிவி பிரகாஷ்.

அதுதான் முதன் முதலில் ஜிவி பிரகாஷ்க்கும் அவர் மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட காரணமாக அமைந்தது என்கிறார் பயில்வான் ரங்கநாதன். மேலும் வேண்டுமென்றே அதை ஜீவி பிரகாஷ் செய்தார் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் அந்த படம் நடிக்கும்போது மனிஷா யாதவற்க்கும் திருமணம் ஆகியிருந்தது. இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதனின் அந்த பேட்டி தற்சமயம் வைரலாக துவங்கியிருக்கிறது.

More in News

ads
To Top