Connect with us

News

“நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..” புது குண்டை தூக்கி போட்ட சவுக்கு சங்கர்.. தலை சுத்துதுடா சாமி..

By TamizhakamMärz 15, 2024 12:36 PM IST

திரை உலகில் ஏற்கனவே அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி பல்வேறு விஷயங்கள் கசிந்து வரக்கூடிய வேளையில் தற்போது நிவேதா பெத்துராஜ் மற்றும் உதயநிதிக்கு இடையே உள்ள தொடர்பை கழுவி ஊற்றும் வகையில் இணையங்களில் செய்திகள் வெளி வந்து மக்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இளம் நடிகைக்கு போதை மருந்து கொடுத்து விடிய விடிய நாசம் செய்த நடிகர்.. நடிகையே வெளியிட்ட தகவல்..!

மேலும் தற்போது தமிழகத்தில் கடுமையான தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கும் போலீசார் போதை பொருள் கடத்தல் சம்பந்தமான லீலைகளில் ஈடுபட்ட ஜாஃபர் சாதிக்கை கைது செய்ததை அடுத்து பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளின் பெயர்கள் விரைவில் வெளி வரும் என்ற பீதியில் இருக்கிறார்கள்.

நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..

இந்த நிலையில் ஏற்கனவே இணையங்களில் நிவேதா பெத்துராஜ்க்கு பல்வேறு வகைகளில் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்ததாகவும் அதுமட்டுமல்லாமல் இவருக்கு 50 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா ஒன்றை பரிசளித்ததை அடுத்து அடிக்கடி அவர் சென்னை வந்து செல்கிறார் என்ற விஷயம் லீக் ஆனது.

மேலும் இவர் ஒரு சிறந்த திரைப்பட நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் விளையாட்டுகளில் ஈடுபாடு மிக்கவர். இவர் சென்னை வந்து செல்லும்போதெல்லாம் அந்தப் போட்டியில் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று பிரபல செய்தி ஊடகம் ஒன்று வித விதமான தலைப்புகளுடன் செய்தியை வெளியிட்டு அமைச்சர் உதயநிதியின் மனதை குளிர வைக்கிறது.

குண்டை போட்ட சவுக்கு சங்கர்..

இப்படி செய்வதின் அவசியம் என்ன? எதற்காக இந்த விஷயங்கள் வெளி வருகிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து பகீர் கிளப்பி இருக்கிறார் சவுக்கு சங்கர். ஏற்கனவே இவர் அரசியலில் நடக்கும் அல் பத்தனமான காரியங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து அனைவருக்கும் புரியும் படி பேசுவதில் வல்லவர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் நேரடியாக விளக்கம் கொடுத்தார். அந்த விளக்கத்தில் சவுக்கு சங்கர் பெயரையோ, உதயநிதி பெயரையோ குறிப்பிடாமல் அவருடைய அறிக்கை இருந்ததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் மிதந்தார்கள்.

மேலும் இந்த அறிக்கையில் தன்னை பற்றி தவறான தகவல்கள் சொல்பவர்கள் உங்கள் பெயரை தவறாக பயன்படுத்தும் போது என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் ஏன் குறிப்பிட்ட நபர்களின் பெயரை குறிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விழி பிதுங்கும் மக்கள்..

மேலும் துபாயில் வீடு வாங்கித் தந்த விவகாரம் முதற்கொண்டு அவருக்கு செய்து வரும் உபகாரங்கள் அனைத்தும் கடந்த இரண்டு வாரங்களாக இணையத்தில் பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல பல்வேறு விஷயங்கள் கசிந்து வரும் வேளையில் சவுக்கு சங்கர் புது குண்டு ஒன்றை தூக்கிப் போட்டு இருக்கிறார்.

அந்த குண்டில் நிவேதா பெத்துராஜ் குறித்து நான் கூறியது உண்மைதான். நான் சொன்னது பொய் என்றால் என் மீது வழக்கு போடச் சொல்லுங்கள். நீதிமன்றத்தில் அதற்கு உண்டான ஆதாரங்களை நான் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் எனது இதற்கு ஆதாரம் வேறு இருக்கிறதா? தலை சுத்துதடா.. சாமி.. என்று புலம்பி வருகிறார்கள்.

இதையும் படிங்க: இப்படியும் பணம் சம்பாதிக்கனுமா.. கணவருடன் அனிதா சம்பத் செய்த வேலை.. வச்சி செய்யும் நெட்டிசன்ஸ்..

இதனை அடுத்து இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபமாக மாறி புது கூண்டை தூக்கி போட்டு இருக்கும் சவுக்கு சங்கரின் ஆழமான கேள்விக்கு விளக்கமான பதிலை நிவேதா பெத்துராஜ் அளிப்பாரா? இல்லை இது போல அமைதியாக இருப்பாரா? எது உண்மை என்பதை விரைவில் தெரிவித்தால் நல்லது இல்லை என்றால் இது போன்ற பல விஷயங்கள் வெளி வரலாம் அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வையுங்கள் என்று கூறி இருக்கிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top