ரேஷ்மா பசுபுலேட்டி,(Reshma Pasubulati) கவர்ச்சி புயலாக தமிழக ரசிகர்களின் மனதில் மையம்கொண்டிருக்கிறார், அதனால், எப்போதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எல்லா பக்கங்களிலும், அவரது எல்லை தாண்டிய கவர்ச்சி படங்கள், ரசிகர்களை திக்குமுக்காட வைக்கின்றன.
புடவை கட்டிய பூங்கோதையாக, மாடர்ன் டிரஸ்சில் மடோனாவாக, ரசிகர்களை இன்பக்கடலில் மூழ்கடித்து விடுகிறார். தனது தினசரி பணிகளில் முக்கிய ஒன்றாக, ரேஷ்மா தினமும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் வில்லி கேரக்டரில் நடிக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. ராதிகா என்ற இவரது கேரக்டர் ரசிகர்களின் பலத்த ஆதரவை, வரவேற்பை பெற்றிருக்கிறது. ரேஷ்மா, சினிமாவிலும் நடித்திருக்கிறார்.
ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.ரேஷ்மா நியூஸ் ரீடராக பணி செய்திருக்கிறார். விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்திருக்கிறார். தெலுங்கு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர் ரேஷ்மா..
Reshma Pasubulatiஇவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா தானாம். சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவுக்கு இருக்கிறார்., பசுபுலேட்டி என்பது இவரது குடும்ப பெயர்.
பிரபல நடிகர் பாபி சிம்ஹா இவரது சகோதரர்.ஐதராபாத்தில், மால் ஒன்றுக்கு ரேஷ்மா சென்றிருக்கிறார். அங்கு ஒரு சேனலில் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை பேட்டி கண்டிருக்கின்றனர். அவர் பேசிய அழகை கண்டு, அந்த தெலுங்கு சேனலில், ஆங்கில செய்தி வாசிப்பாளராக அவரை பணிசெய்ய கூறியுள்ளனர். ரேஷ்மா ஓகே சொல்லி இருக்கிறார்.
[irp posts=»93000″ ]
அதன்பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் அமைய, அதையும் சிறப்பாக ரேஷ்மா செய்திருக்கிறார். அதன்பிறகு. லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், பின் ஜெமினி டிவியில் செலிபரிட்டி கிச்சன் என்ற தொடரிலும் பங்கேற்றார்.
Reshma Pasubulatiஅதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா. இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார். அடுத்து, வேலைன்னு வந்து வெள்ளக்காரன் என்ற படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்தார்.
Reshma Pasubulatiசில நடிகைகள் மாடர்ன் டிரஸ்சில் அழகாக இருப்பர். புடவை கட்டினால், அவ்வளவு அழகாக இருக்க மாட்டார்கள். சிலருக்கு புடவையில் இருக்கும் அழகு, மாடர்ன் டிரஸ்சில் மறைந்துபோய் விடும். ஆனால், ரேஷ்மா பசுபுலேட்டி எந்த டிரஸ் அணிகிறாரோ, அந்த டிரஸ்க்கு அழகு சேர்க்கும் அழகியாக மாறிவிடுகிறார். மாடர்னாக இருந்தாலும், மடிசார் மாமியாக இருந்தாலும் தோற்றத்தில் அசத்தி விடுகிறார் ரேஷ்மா.
Reshma Pasubulatiஅதனால், அவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிகிறது. அதனால், சந்தோஷத்தில் அம்மணி ரேஷ்மா, அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்து அவரும் சந்தோஷப்படுகிறார். ரசிகர்களையும் குஷிப்படுத்துகிறார். இதனால், முல்லை பூங்கொடி, சிந்தாமணி, ,வனிதாமணி, அழகு தேன்மழை என, கமெண்டுகளில் ரசிகர்கள் ரேஷ்மாவை புகழ்ந்து கவிதை பாடி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.
[irp posts=»93101″ ]
Loading ...
- See Poll Result