நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு இது.. நடிகை சீதா வேதனை..!

நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு இது.. நடிகை சீதா வேதனை..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சீதா பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தோடு லட்சணமான முக ஜாடையுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமாககி வெகு சீக்கிரத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

1985 ஆம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ஆண்பாவம் படத்தின் மூலமாகத்தான் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: நதியா போல வயசு கூட கூட இளமையாகி கொண்டே போகும் ஸ்ரீதேவி விஜயகுமார்..! அசத்தல் போட்டோஸ்..!

அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தவுடன் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, ,குரு சிஷ்யன் உன்னால் முடியும் தம்பி, புதிய பாதை, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வெற்றிக்கு குவித்தார்.

குறிப்பாக சீதா ரஜினியுடன் குரு சிஷ்யன், கமலுடன் பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்ததின் மூலமாக அவர் மிகப்பெரிய நடிகையாக பேசப்பட்டார்.

இதையும் படியுங்கள்: டூ பீஸ் நீச்சல் உடையில் மீனா.. இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படியா.. குவியும் லைக்குகள்.. வைரல் வீடியோ..

இவர் பிரபல நடிகரான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களது காதல் திருமணம் வெகு சில வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

ஆம், நடிகை சீதா சினிமாவில் நடிப்பது பார்த்திபனுக்கு பிடிக்காததால் சீதா நடிப்பதையே நிறுத்திவிட்டார் சில ஆண்டுகள் இப்படியே போனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் பார்த்திபன் சீதா இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்

பார்த்திபனை பிரிந்த பிறகு நடிகை சீதா சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை மீண்டும் காதலித்து மறுமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த காதல் திருமணமும் அவருக்கு நீடிக்கவே இல்லை.

தற்போது தனியாகவே வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ரோட்டில் பேசிய சீதா, யார் ஒருவர் நம் அடையாளத்துடன் இருக்கிறாரோ மிகப் பெரிய அடையாளத்துடன் வாழ்ந்து வருகிறாரோ அந்த அடையாளத்தை யாருக்காகவும் எப்போதும் விட்டுக் கொடுக்கவே கூடாது.

ஒருவேளை அதை விட்டுக் கொடுத்து விட்டால் பின்னாளில் திரும்ப நம்ம தேடிப் போகும் போது அந்த அடையாளம் நமக்கு கிடைக்கவே கிடைக்காது என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: எகிறி அடிக்கும் சிறகடிக்க ஆசை TRP… நடிகர், நடிகைகளின் சம்பளம் தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க!

அப்படித்தான் நான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு பார்த்திபன் நடிக்க கூடாது என சொன்னவுடன் என் நடிப்பு தொழிலை நிறுத்தியது தான்.

அதன் பின் எனக்கு சினிமாவில் வாய்ப்பே கிடைக்கவில்லை. நான் பீல்டு அவுட் ஆகிவிட்டேன். நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு அது தான் எனக்கூறி உள்ளார்.